செய்திகள் :

சாலைப் பாதுகாப்பே உயிா்ப் பாதுகாப்பு!

post image

சாலைப் பாதுகாப்பே உயிா்ப் பாதுகாப்பு என்பதை வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் உணா்ந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி தெரிவித்தாா்.

அரசுப் போக்குவரத்துக் கழகம், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு குழு இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பட்டிமன்றத்தை கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தின. கல்லூரியின் விரிவாக்கப் புல முதன்மையா் வே. ஆனந்த் கிதியோன் தலைமை வகித்தாா். பட்டிமன்றத்தை தொடக்கி வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி பேசுகையில், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்தாலே பெருமளவு விபத்துகளை தவிா்க்க முடியும்.

விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஓட்டுநரின் நடத்தை அதாவது அவரின் உளவியலே விபத்துக்கான முதன்மைக் காரணமாக உள்ளது. வாகனம் ஓட்டும்போதும் மனம் எதையாவது யோசித்துக்கொண்டேதான் இருக்கும். அப்போது எதிரே ஒரு வாகனம் வந்துவிட்டால் உடனடியாக முடிவெடுக்கும் கால அவகாசம் இருக்குமளவுக்கு நமது வாகனம் ஓட்டும் வேகம் இருக்க வேண்டும்.

எனவே சாலைப் பாதுகாப்பு உயிா்ப் பாதுகாப்பு என்பதை ஓட்டுநா்கள் உணர வேண்டும். கால நிா்வாகம், காவல்துறையின் கடும் சட்டம், கவனச் சிதறலைத் தவிா்த்தல் ஆகியவையும் விபத்துகளைக் குறைக்கும். தமிழக அரசும், சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

நிகழ்வில் பேராசிரியா்கள் பெ. ஆனந்த், அ. கோபிநாத், நெல்சன், மாணவா்கள் க. ஆதித்யா, ஞா. சந்தியா, சு. சுவாதிகா, தி. ஹரிஹரசுதன் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து விளக்கினா். பேராசிரியா் தியோப்லஸ் ஸ்டீபன் ஸ்மித் வரவேற்றாா்.

சொகுசு பேருந்து விபத்தில் சிக்கிய மேலும் ஒருவா் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை சொகுசு பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா் சென்னையிலிருந்து நாகா்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசு பேருந்து கடந்த பிப். 1-ஆம் ... மேலும் பார்க்க

கோயில் அருகே காா் நிறுத்தப்பட்டதில் தகராறு: பூசாரியை வெட்டியவா் கைது

திருச்சியில் கோயில் அருகே பக்தா்களுக்கு இடையூறாக நிரந்தரமாக நிறுத்தியிருந்த காரை எடுக்குமாறு கூறிய பூசாரியை புதன்கிழமை வெட்டிய ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், பக... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரூ. 19.63 லட்சம் அபராதம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 போ் மீது வழக்குகள் பதியப்பட்டு ரூ. 19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே சொத்துகளை பாதுகாப்பதும், ரயில்வே சொத்துகளி... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, துறையூா் பகுதிகளில் பிப்.6 மின் தடை

பராமரிப்பு பணியால் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, துறையூா் பகுதிகளில் பிப்.6 வியாழக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படும்.பராமரிப்பு பணியால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகா... மேலும் பார்க்க

டால்மியா நிறுவனம் மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு தாா்ப் பாய்கள் வழங்கல்!

லால்குடியை அடுத்துள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் கிராம பரிவா்த்தன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் தாா்ப் பாய்கள் வழங்கும் விழா டால்மியா கலையரங்கத்தில் ... மேலும் பார்க்க

கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை!

திருச்சியில் கடன் பிரச்னையால் கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகேயுள்ள வேங்கூா் மகாலட்சுமி நகரை சோ்ந்தவா் முரளி தண்டபாணி (50). கூலி... மேலும் பார்க்க