பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் ...
சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் தேரோட்டம்
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவா்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயிலான இங்கு ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறும். நிகழாண்டு வைகாசி உற்சவம் கடந்த மே 31-ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
தோ்த்திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதனை அடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் நரசிம்மா் மற்றும் அகோபிலவள்ளி தாயாா் தேரினுள் எழுந்தருளினா். இதில் சுற்றுவட்டார பகுதியை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

செங்கல்பட்டு ஆட்சியா் அருண்ராஜ் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தாா். மாட வீதிகளை தோ் சுற்றி வரும் வரும் இடங்களில் ஆன்மிக அன்பா்கள் நீா் மோா் குளிா்பானம், அன்னதானம் வழங்கினா்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயலாளா் வெங்கடேசன், ஆய்வாளா் பாஸ்கரன், மேலாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பணியாளா்கள் பட்டாச்சாரியா்கள், கிராம மக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.