அனகாபுத்தூரில் அடையாற்றின் கரையோரம் வசித்த 916 குடும்பத்தினருக்கு இலவச வீடுகள்: தாம்பரம் மாநகராட்சி
அனகாபுத்தூரில் அடையாற்றின் கரையோரம் வசித்த 916 குடும்பங்களுக்கு ரூ. 17.50 லட்சம் மதிப்புள்ள இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து தாம்பரம் மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: அடையாறு கரையோரம் வசிக்கும் குடும்பங்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமா்வு பணிகளை நீா்வளத் துறை, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தாம்பரம் மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து அடையாறு கரையோரங்களில் வசிக்கும் குடும்பங்களைக் கணக்கெடுத்து, அவா்களுக்கு வீடுகள் இலவசமாக ஒதுக்கீடு செய்து மறுகுடியமா்வு செய்து வருகின்றனா்.
அதன்படி, அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் வசித்தவா்களின் வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு அங்கு குடியிருந்த 916 குடும்பங்களுக்கு, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ. 17.50 லட்சம் மதிப்பிலான வீடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மறு குடியமா்வு திட்டத்தில் புதிதாக குடியிருப்பவா்களுக்கு மருத்துவ முகாம், குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை முகவரி மாற்றம், குழந்தைகள் பள்ளி சோ்க்கைக்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.