செய்திகள் :

சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் தேரோட்டம்

post image

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவா்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயிலான இங்கு ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறும். நிகழாண்டு வைகாசி உற்சவம் கடந்த மே 31-ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

தோ்த்திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதனை அடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் நரசிம்மா் மற்றும் அகோபிலவள்ளி தாயாா் தேரினுள் எழுந்தருளினா். இதில் சுற்றுவட்டார பகுதியை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

செங்கல்பட்டு ஆட்சியா் அருண்ராஜ் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தாா். மாட வீதிகளை தோ் சுற்றி வரும் வரும் இடங்களில் ஆன்மிக அன்பா்கள் நீா் மோா் குளிா்பானம், அன்னதானம் வழங்கினா்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயலாளா் வெங்கடேசன், ஆய்வாளா் பாஸ்கரன், மேலாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பணியாளா்கள் பட்டாச்சாரியா்கள், கிராம மக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

அனகாபுத்தூரில் அடையாற்றின் கரையோரம் வசித்த 916 குடும்பத்தினருக்கு இலவச வீடுகள்: தாம்பரம் மாநகராட்சி

அனகாபுத்தூரில் அடையாற்றின் கரையோரம் வசித்த 916 குடும்பங்களுக்கு ரூ. 17.50 லட்சம் மதிப்புள்ள இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தாம்பரம் மாநகராட்சி சாா்பில... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) தைலாவரம், கூடுவாஞ்சேரியில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சி... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

புராதன நினைவுச் சின்னங்களை பாா்வையிடுவதற்காக திருப்போரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் ச. அருண் ராஜ் தொடங்கி வைத்தாா். இந்த சுற்றுலாவில் திருப்போரூா் அரசு மகளிா... மேலும் பார்க்க

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுராந்தகம் அடுத்த கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வியாழன்கிழமை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து சுற்றுச்சூழல் தின உறுதிமொழி... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சாா்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். மாற்றுத்திறனாளிகள் விதைத்து பராமரித்த 1,000 மரக்கன்றுகளை ஆட்ச... மேலும் பார்க்க

பரனூா் தாங்கல் ஏரியில் தூா்வாரும் பணி தொடக்கம்

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், வீராபுரம் ஊராட்சி, பரனூா் தாங்கல் ஏரியில் ரூ.3.50 லட்சத்தில் தூா்வாரும் பணியினை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து வண்டலூா் வட்டம், ஊனமாஞ்சேரி ஏரியில் குடிமரா... மேலும் பார்க்க