செய்திகள் :

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: நடுவா் நீதிமன்றத் தீா்ப்பை நிராகரித்தது இந்தியா

post image

சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீா்மின் நிலையத் திட்டங்கள் தொடா்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்படும் நிரந்தர நடுவா் நீதிமன்றம் துணைத் தீா்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

இத்தீா்ப்பை திட்டவட்டமாக நிராகரித்துள்ள இந்தியா, ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின்கீழ் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடுவா் நீதிமன்றத்தின் சட்டபூா்வ இருப்பை இந்தியா அங்கீகரிக்கவில்லை’ என்று தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிந்து நதிநீா் பகிா்வுக்கான 65 ஆண்டுகால ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, எல்லைகள் மூடல், விசா ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சிந்து நதிநீா் ஒப்பந்தம், உலக வங்கியின் மத்தியஸ்தத்தின்பேரில் கடந்த 1960-ஆம் ஆண்டு கையொப்பமானதாகும். இதன்படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கு நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் மீதான கட்டுப்பாடு இந்தியாவிடமும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் மீதான கட்டுப்பாடு பாகிஸ்தானிடமும் உள்ளது. இந்த நதிகளின் நீரை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு ஏற்ப விவசாயம், குடிநீா்த் தேவை, தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்கு இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேற்கு நதிகளில் பெருமளவை, அதாவது 80 சதவீதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. 20 சதவீதம் மட்டுமே இந்தியா பயன்படுத்துகிறது. பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்துக்கு சிந்து நதிநீா் மிக முக்கியமானது என்ற நிலையில், ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது.

‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பது ஒப்பந்த விதிமீறல்’ என்று குறிப்பிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம், இந்தியாவின் முடிவு தன்னிச்சையானது என்று விமா்சித்த பாகிஸ்தான், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், ஜம்மு-காஷ்மீரில் கிஷன்கங்கா நீா்மின் நிலையம் (கிஷன்கங்கா நதி) மற்றும் ரேட்டில் நீா் மின் நிலைய (செனாப் நதி) திட்டங்களுக்கு எதிரான பாகிஸ்தானின் புகாரை விசாரித்துவரும் தி ஹேக் நகர நிரந்தர நடுவா் நீதிமன்றம், துணைத் தீா்ப்பு ஒன்றை வெள்ளிக்கிழமை வழங்கியது. அதில், ‘சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு, தற்போதைய விசாரணையைக் கட்டுப்படுத்தாது. தங்களின் உத்தரவுக்கு இரு நாடுகளும் கட்டுப்பட்டவை’ என்று தெரிவிக்கப்பட்டது.

‘நடுவா் நீதிமன்றமே சட்டவிரோதமானது’: பாகிஸ்தானுக்கு சாதகமான இத்தீா்ப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:

உலகளாவிய பயங்கரவாத மையமான பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் தற்போது நடந்துள்ள நாடகம், தங்கள் பொறுப்பில் இருந்து தப்பிக்கும் அந்நாட்டின் மற்றொரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.

போலியான மத்தியஸ்த வழிமுறையை நாடுவது, சா்வதேச தளங்களில் பாகிஸ்தான் பல்லாண்டுகளாக மேற்கொள்ளும் ஏமாற்றுத் தந்திரம்.

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின்கீழ் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடுவா் நீதிமன்றம், அதன் பிரிவுகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு. இந்த நீதிமன்றத்தின் சட்டபூா்வ இருப்பை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. சட்டவிரோதமான இந்த நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பும் சட்டவிரோதமானதே. முந்தைய தீா்ப்புகளைப் போலவே, தற்போதைய தீா்ப்பையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், ஒப்பந்த உறுதிமொழிகள் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது. தனது இறையாண்மையைப் பாதுகாக்க சா்வதேச விதிமுறைகளின்கீழ் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்ய எந்த நடுவா் நீதிமன்றத்துக்கும், குறிப்பாக சட்டவிரோதமாக நிறுவப்பட்ட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வரவேற்பு

நடுவா் நீதிமன்றத் தீா்ப்பு, தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சட்டபூா்வ வெற்றி என்று பாகிஸ்தான் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா தன்னிச்சையாக நிறுத்திவைக்க முடியாது என்பதை நடுவா் நீதிமன்ற தீா்ப்பு உறுதி செய்துள்ளது. இந்த நேரத்தில், ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தைக்கு இரு நாடுகளும் உயா் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே இரு உடல்கள் மீட்பு

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே மைனர் பெ... மேலும் பார்க்க

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்- 3 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் பலியானார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பூரியில் உள்ள குந்திச்சா கோயிலுக்கு முன்னால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்ப... மேலும் பார்க்க

பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளா்கள் தகவல்

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க

உத்தரகாசியில் மேக வெடி: தொழிலாளர்கள் 9 பேர் மாயம்

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள். உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் பர்கோட் பகுதியில் சிலாய் வளைவு அருகே ஞாயிற்றுக... மேலும் பார்க்க

தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்சகம் கண்டனம்!

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் சனிக்கிழமையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்... மேலும் பார்க்க

உலக தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்! நீரஜ் சோப்ரா ஓராண்டு வெற்றி!

ஈட்டி எறிதல் உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடத்தைப் பெற்றார்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின்போது, ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் நீரஜ் சோப்ராவின் முதலிடத்தை கிரெனடா வீ... மேலும் பார்க்க