செய்திகள் :

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

post image

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் 7,842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற கணிதப் பாட வினாத்தாள் எப்படி இருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

பொதுவாக தேர்வெழுதிய மாணவர்களைப் பொருத்தவரை இந்த கணித வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது என்றுதான் கூறியிருக்கிறார்கள். பெரும்பாலான கேள்விகள் நேரடியாகவே கேட்கப்பட்டிருந்ததாகவும், நேரம் போதாமையால் சில மாணவர்கள் சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளனர்.

கேள்விகள் கடினமாக இல்லை. ஆனால், அனைத்தையுமே அப்படி சொல்லிவிட முடியாது. வழக்கம்போல நீண்ட வினாத்தாள் சிக்கலால் சில மாணவர்கள் கடைசியாக கேட்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு பதில் எழுத முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அதாவது, நல்ல மதிப்பெண் எடுப்பதற்கான வினாத்தாள்தான், ஆனால், நீண்ட கணக்குப்போட்டுப் பார்த்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டியது இருந்ததால் நேரம்போதவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.

பிப்.15ஆம் தேதி தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடைகிறது. 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்தப் பொதுத் தேர்வை நாடு முழுவதும் 42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். 10ஆம் வகுப்புக்கு 84 பாடப்பிரிவுகளிலும், 12ஆம் வகுப்புக்கு 120 பாடப்பிரிவுகளிலும் தேர்வுகள் நடைபெறும்.

இந்திய சிறைகளில் 70% விசாரணைக் கைதிகள்!

இந்திய சிறைச்சாலைகளில் 70% பேர் விசாரணைக் கைதிகளாக இருப்பதாக உள் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. ஜாமீன் அல்லது அபராதத் தொகையை செலுத்தப் போதிய பணம் இல்லாததால், அவர்கள் சிற... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல்: நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவு!

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்க... மேலும் பார்க்க

பிரித்தாளும் அரசியல் பிடிக்கவில்லை: பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங். கட்சியில் ஐக்கியம்!

கொல்கத்தா : மேற்கு வங்கத்திலுள்ள ஹல்தியா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்திருந்த தாபசி மண்டல், இன்று(மார்ச் 10) அம்மாநில ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இ... மேலும் பார்க்க

சம்பல் வன்முறையில் சிறை சென்ற பெண்: விடுதலையாக உதவிய 120 கிலோ உடல் எடை!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் குற்றவாளியாகக் கருதி சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பெண் 84 நாள்களுக்குப் பிறகு நிரபராதி என உறுதி செய்யப்பட்டு விடுதலையாகியுள்ளார். அவர் ... மேலும் பார்க்க

முதலிரவில் புதுமண தம்பதி மரணம்! காரணம் தெரியாமல் குழப்பத்தில் உறவினர்கள்

திருமண நாளன்று இரவில் புதுமண தம்பதி மரணித்திருப்பது அயோத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பிரதீப் என்ற இளைஞருக்கும்... மேலும் பார்க்க

ஆடம்பர ஆடைகளைத் தவிர்க்கும் இந்திய மணப்பெண்கள்!

இந்திய மணப்பெண்கள் திருமண நாளில் ஆடம்பர ஆடைகள் அணிவதைத் தவிர்த்து வருவதாக நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆடம்பரமான இந்திய திருமண கலாசாரத்துக்கு மாறாக எளிமையான வடிவமைப... மேலும் பார்க்க