செய்திகள் :

சிறார் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டைகள்! 30 அதிகாரிகள் மீது வழக்கு!

post image

அமெரிக்காவில் சிறுவர்கள் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டை போட்டிகள் நடத்தப்பட்ட விவகாரத்தில் 30 அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் பட்ரினோஸ் சிறார் தடுப்பு காவல் மையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அங்குள்ள சிறுவர்களுக்கு இடையே சண்டை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

‘கிளாடியேட்டர் சண்டைகள்’ என வர்ணிக்கப்படும் இந்த சட்டவிரோத சண்டைப் போட்டிகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியே கசிந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட 143 சிறுவர்களுக்கு இடையே நடந்த இந்த சட்டவிரோத போட்டிகளை அந்த சிறையின் அதிகாரிகள் ஊக்குவித்தும் நடத்தியும் வந்ததாகவும் அதனை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் 86 வயதில் காலமானார்!

முன்னதாக, மொத்தம் 69 முறை அரங்கேறிய இந்த சட்டவிரோத சண்டைப் போட்டிகளினால் அதில் பங்குபெற்ற சிறுவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 30 சிறைத்துறை அதிகாரிகளின் மீது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் லாஸ் பட்ரினோஸ் தடுப்புக் காவல் மையம் கடந்த ஆண்டு ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர்களில் 22 பேர் கடந்த மார்ச்.3 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். மீதமுள்ள 8 அதிகாரிகள் ஏப்ரல் மாதம் தங்களது குற்றத்திற்காக ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

சட்டக் கல்லூரி காவலாளியைக் கடத்திய பாகிஸ்தான் பாதுகாப்புப் படை?

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் சட்டக் கல்லூரியின் காவலாளியை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. பலோசிஸ்தானின் சங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் சயீத் பலோச், இவர் பல ஆண்... மேலும் பார்க்க

கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது புகார்!

மகாராஷ்டிரத்தில் கோல்வாக்கரின் புத்தகம் சத்ரபதி சிவாஜியை இழிவுப் படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்ப... மேலும் பார்க்க

கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வரும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர்

ஜோர்டான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். திருவணந்தப்புரத்தின் தும்... மேலும் பார்க்க

51 புதிய வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்!

தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர... மேலும் பார்க்க

பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாயம்!

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட கொரியா நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அரு... மேலும் பார்க்க

6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு

சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ... மேலும் பார்க்க