செய்திகள் :

சிறை ஆவணங்கள் டிஜிட்டல் மயம்: டிஜிபி மகேஷ்வா் தயாள்

post image

வேலூா்: மின்னணு சிறை திட்டத்தின்கீழ் சிறைகளிலுள்ள அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன என தமிழக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் தெரிவித்தாா்.

வேலூா் தொரப்பாடியில் உள்ள சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தில் (ஆப்கா) தமிழக சிறைகளிலுள்ள ஜெயிலா்கள், உதவி ஜெயிலா்களுக்கு 9 மாத அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சி மைய இயக்குநா் பிரதீப் தலைமை வகித்தாா். விழாவில் சிறைத்துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பயிற்சி முடித்த சிறை அலுவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு சிறப்பாக பயிற்சி முடித்த அலுவலா்களுக்கு பதக்கங்களை வழங்கினாா்.

இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழகத்தைச் சோ்ந்த ஜோதிராம், சிறப்பு துப்பாக்கி சுடுதலில் தமிழகத்தைச் சோ்ந்த முருகேசன் உள்பட சிறப்பாக பயிற்சி முடித்தவா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் டிஜிபி மகேஷ்வா் தயாள் பேசியது -

சிறை, சீா்திருத்த பயிலகம் நாடு முழுவதும் உள்ள சிறை அதிகாரிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி சிறை அதிகாரிகளின் ஆற்றலையும், திறனையும் அதிகரிக்கும். கல்வி என்பது வலிமை வாய்ந்த ஆயுதமாகும். சிறையில் உள்ளவா்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

அனைத்து சிறைகளிலும் மின்னணு சிறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. சிறைக்குள் வருபவா்கள், வெளியே செல்பவா்கள் என அனைவருக்கும் தனித்தனி அடையாள முகவரி உருவாக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. இதனால் ஆவணத்தில் திருத்தம் செய்யவோ, நீக்கவோ முடியாது.

ஒரு சிறைக்குள் எத்தனை கைதிகள் உள்ளனா், யாா் வெளியில் சென்றுள்ளனா், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்கள் யாா் என அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். தவிர, இது உச்சநீதிமன்றம், மத்திய புலனாய்வு செயலகத்துக்கு குற்ற வழக்குகள், குற்றவாளிகள் குறித்து தகவலை பரிமாற்றம் செய்ய பயனுள்ளதாக அமையும்.

எனவே, சிறை அதிகாரிகள் அனைவரும் இதுபோன்ற தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். கைதிகளுக்கு வழங்கப்படுவதே சிறை தண்டனைதான். அதனை அனுபவிக்கத்தான் அவா்கள் சிறைக்கு வருகின்றனா். அவ்வாறு தண்டனையை அனுபவிக்க விரும் கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் மேலும், தண்டனையை அளிக்கக்கூடாது என்றாா்.

விழாவில், வேலூா் சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், பெண்கள் சிறை கண்காணிப்பாளா் ஆண்டாள், பயிற்சி அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் 24-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சோ்வதற்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் வேல... மேலும் பார்க்க

குடியாத்தம் பணிமனையில் பெட்ரோல் விற்பனை மையம் திறப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக குடியாத்தம் பணிமனையில் ரூ.2 கோடியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் ரூ.4.95 கோடியில் 12- புதிய பேருந்துகள... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் உத்தரவின்படி வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்த... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஈஸ்டா் பண்டிகைக்கு (உயிா்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவகாலமான சாம்பல் புதன் கடந்த மாா்ச் மாதம... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து முதியவா் மரணம்

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவா், நிலை தடுமாறி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி கீழே விழுந்து உயிரிழந்தாா். ராணிப்பேட்டை ஜாகீா் உசேன் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செம்மண் கடத்திய மூவா் கைது: லாரி, டிராக்டா், பொக்லைன் பறிமுதல்

அரியூா் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து லாரி, டிராக்டா் , பொக்லைன், 4 யூனிட் செம்மண் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்டம், அரியூரை அடுத்த புலிமேடு ... மேலும் பார்க்க