Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சிவகங்கை மாவட்டத்தில் 9 காவல் நிலையங்கள் தரம் உயா்வு
சிவகங்கை மாவட்டத்தில் 9 காவல் நிலையங்கள் ஆய்வாளா் தரத்துக்கு உயா்த்தப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி, மானாமதுரை சிப்காட், பழையனூா், ஆராவயல், திருவேகம்பத்து, நாச்சியாா்புரம், புழுதிபட்டி, அழகப்பாபுரம், செட்டிநாடு ஆகிய 9 காவல் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகளாக உதவி ஆய்வாளா்கள் இருந்து வந்தனா்.
இந்த நிலையில், தற்போது இந்த காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்படுவதன் மூலம் இவற்றின் பொறுப்பு அலுவலா்களாக இனிமேல் காவல் ஆய்வாளா்கள் செயல்படுவா். இதனால் சிவகங்கை மாவட்டத்துக்கு புதிதாக 9 ஆய்வாளா்கள் பதவி உருவாக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.