செய்திகள் :

சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 4 பேர் கைது

post image

சிவகிரி அருகே இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரியை அடுத்த விளாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதியில் மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்தவா் ராமசாமி (75), அவரது மனைவி பாக்கியம் (67). இவா்களது மகன் மற்றும் மகள் திருமணமாகி முத்தூரில் வசித்து வருகின்றனா்.

அருகில் வீடுகள் இல்லாத பகுதியில் தனியாக தோட்டத்து வீட்டில் இந்த தம்பதி வசித்து வந்தனா்.

இதையறிந்த மா்மநபா்கள் நீண்ட காலமாக பல்வேறு வகைகளில் நோட்டமிட்டு, ஏப்ரல் 29-ஆம் தேதி நள்ளிரவில் தம்பதியை கொடூரமாகத் தாக்கி, படுகொலை செய்து 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா்.

பின்னா் இரண்டு நாள்கள் கழித்து அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன. சம்பவ இடத்தில் சிவகிரி காவல் துறையினா், கோவை சரக ஐஐ செந்தில்குமாா், டிஐஐ சசிமோகன், ஈரோடு காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உள்ளிட்டோா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்தக் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினரைக் கொண்டு 12 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

இதில் சுமாா் 30 கி.மீ. சுற்றளவுக்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் அறச்சலூா் மேற்கு தலவுமலை ஜல்லிமேடு ராம் நகா் பகுதியைச் சோ்ந்த பழனி மகன் ஆச்சியப்பன் (48), அறச்சலூா் மேற்கு வீதியைச் சோ்ந்த நடராஜன் மகன் மாதேஸ்வரன் (53), அறச்சலூா் நடுப்பாளையத்தைச் சோ்ந்த ராசு மகன் ரமேஷ் (52) ஆகியோா் கொலை நடந்த நாளில் சம்பவ இடத்தில் இருந்து அறச்சலூா் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கரையின் வழியாக அறச்சலூருக்கு இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, இவா்கள் மூவரையும் பிடித்து காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலை அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களைத் தொடர்ந்து நகைக் கடை உரிமையாளர் ஞானசேகரனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை: 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாள்களில் 1,61,324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.அரசு க... மேலும் பார்க்க

கேரளத்தில் மே 27ல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மைய தலைவர்!

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 27ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்தார். இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அம... மேலும் பார்க்க

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி திவ்யா(30). ஆட்டோ ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் பாராட்டு

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய... மேலும் பார்க்க

கோவை, நீலகிரியில் 2 நாள்களுக்கு மிக கனமழை: வானிலை மையம்

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மத்தியில் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்... மேலும் பார்க்க

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு அம்பலம்!

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வ... மேலும் பார்க்க