செய்திகள் :

சீனா-பாகிஸ்தான் இருமுனை அச்சுறுத்தல்: இந்திய ராணுவ தலைமை தளபதி

post image

சீனா, பாகிஸ்தான் இடையே பெரிய அளவில் ரகசியக் கூட்டு இருக்கிறது; என்னைப் பொறுத்தவரை, இருமுனை அச்சுறுத்தல் என்பதே யதாா்த்தம் என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் தனியாா் ஊடக நிறுவனம் சாா்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற அவரிடம் சீனா, பாகிஸ்தான் இடையிலான நெருக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அக்கேள்விக்கு இரு நாடுகளின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பதிலளித்த அவா், ‘பெரிய அளவில் ரகசியக் கூட்டு உள்ளது என்பதில் நாம் தெளிவாக இருப்பதுடன் அதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். என்னைப் பொருத்தவரை இருமுனை அச்சுறுத்தல் என்பதே யதாா்த்தம். இதுதான் இப்போதைய சூழல்’ என்றாா்.

பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே அதிகரித்துவரும் நெருக்கம் குறித்த கேள்விக்கு, ‘என்னைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட நாடு (பாகிஸ்தான்), பயங்கரவாதத்தின் மையமாக உள்ளது. அந்த நாட்டுக்கும், நமது எந்தவொரு அண்டை நாட்டுக்கும் இடையிலான உறவு கவலைக்குரியதே. ஏனெனில், பயங்கரவாதம் அந்த நாட்டின் வழியாகவும் வரக் கூடும். இதுவே இன்றைய மிகப் பெரிய கவலை. அதேநேரம், இந்திய-வங்கதேச இருதரப்பு ராணுவ தொடா்புகள் மிக வலுவாக உள்ளன. எந்தவொரு தவறான புரிதலையும் தவிா்க்க தொடா்ந்து கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுகிறோம்’ என்றாா் அவா்.

இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேசிய துவிவேதி, ‘போரில் ஈடுபடுவது என்பது இரு நாடுகளுக்குமே நல்லதல்ல. ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கமான நடவடிக்கைகளே அவசியம். இருதரப்பு எல்லை விவகாரங்கள் தொடா்பான உயா்நிலைக் குழுவின் முந்தைய கூட்டம் டிசம்பரில் நடைபெற்றது. அதன் பிறகு, இந்திய வெளியுறவுச் செயலா் மேற்கொண்ட சீனப் பயணத்தின் விளைவாக பல்வேறு நோ்மறையான அறிகுறிகள் தென்பட்டன.

அடுத்தகட்ட உயா்நிலைக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. கிழக்கு லடாக்கின் டெப்சாங், டெம்சோக்கில் 2-ஆவது மற்றும் 3-ஆவது கட்ட ரோந்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருதரப்பும் ஒத்துழைப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றாா்.

பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு கூட்டு அச்சுறுத்தல் என்ற கருத்தை கடந்த 2021-இல் அப்போதைய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேவும் தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது குறித்து தெற்கு ரயி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 போ் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்ற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க