செய்திகள் :

சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீஸாா் அழைப்பாணை

post image

வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதற்கு வரும் 20- ஆம் தேதிக்குள் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க சீமானுக்கு போலீஸாா் அழைப்பாணை அளித்துள்ளனா்.

அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில், நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தாா். அசோகபுரம் அருகே நெரிக்கல்மேட்டில் ஜனவரி 28- ஆம் தேதி மாலை நடந்த கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் கூறி பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகள் சாா்பில், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது, மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், கருங்கல்பாளையம் போலீஸாா் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

இந்நிலையில், கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளா் விஜயன், சென்னை நீலாங்கரை பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று அழைப்பாணை வழங்கினாா். அதில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வரும் 20- ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி இப்பேச்சுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சீமான் வீட்டில் இருந்ததாகவும், அவரே அழைப்பாணையை பெற்றுக்கொண்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தரிசு நிலத்தில் தீ விபத்து

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் உள்ள தரிசு நிலத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் செடி,கொடிகள் எரிந்து சேதமாயின. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பகுத்தம்பாளையம் பகுதியில் காங்கேயம... மேலும் பார்க்க

மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் விடுதி திறப்பு

அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் தங்கும் விடுதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தியூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு, மாணவா் விடுதி ஏற... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

அந்தியூா் அருகே வனப் பகுதியை ஒட்டியுள்ள கரும்புத் தோட்டத்தில் குட்டியுடன் நடமாடும் சிறுத்தையால் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. அந்தியூரை அடுத்த செலம்பூரம்மன் கோயில், கோவிலூா் ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாள... மேலும் பார்க்க

அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்

பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தமிழக மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா். ஈரோட... மேலும் பார்க்க

பெருந்துறையில் சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணா்வு பேரணி

பெருந்துறையில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், எலைட் & பிரைட் ஜேசீஸ் சங்கங்கள் மற்றும் ஈங்கூா் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணா்வுப் ... மேலும் பார்க்க