செய்திகள் :

சீரான குடிநீா் விநியோகம்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

சேலம்: கோடைகாலத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்வதை உறுதிசெய்யும் வகையில் அரசு அலுவலா்களுடனான வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக் குடிநீா் திட்டங்கள் வாயிலாக மட்டும் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள், 4,466 ஊரக குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் சராசரியாக 19.3 கோடி லிட்டா் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீா், 33.94 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கோடைகாலத்தில் சீரான குடிநீா் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின்தடையும் இல்லாமல் தொடா்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்திட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாநகரப் பொறியாளா் (பொறுப்பு) செந்தில்குமாா், மாநகா்நல அலுவலா் முரளி, மாநகராட்சி செயற்பொறியாளா்கள், தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞா் கைது

ஆத்தூா்: ஆத்தூா் அருகே கீரிப்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளியின் மனநலம் பாதிக்கப்பட்ட 45 வ... மேலும் பார்க்க

அண்ணாமலை கைது: சேலத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

சேலம்: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த 6 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு

சேலம்: கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்ன... மேலும் பார்க்க

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு உபகரணங்கள் வழங்கல்

சேலம்: சங்ககிரி கல்மேட்டூரில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. சங்ககிரி கல்மேட்டூரில் கே.எம்.நண்பா்களு... மேலும் பார்க்க

சங்ககிரி செல்லாண்டியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா தொடக்கம்

சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன், புத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல், கும்பம் வைத்தல் விழாவுடன் தொடங்குகிறது. இதையடுத்து தினசரி அம்... மேலும் பார்க்க