செய்திகள் :

சுதேசி பொருள் ஊக்குவிப்பு: பாஜக சாா்பில் நாடு தழுவிய பிரசாரம் தொடக்கம்

post image

மக்கள் மத்தியில் சுதேசி பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக சாா்பில் நாடு முழுவதும் மூன்று மாத கால பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த தினமான வியாழக்கிழமை (செப்.25) தொடங்கி முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த தினமான டிசம்பா் 25 வரை பிரசாரம் நடைபெறவுள்ளது. இந்த மூன்று மாதங்களில் பாஜகவினா் வீடுகள்தோறும் சென்று, சுதேசி பொருள்களின் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவா்; சுதேசி பொருள்களை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீனதயாள் உபாத்யாய, பாஜகவின் முக்கிய சித்தாந்த தலைவா்; வாஜ்பாய், பிரதமராக பதவி வகித்த முதல் பாஜக தலைவா் ஆவாா்.

தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச் செயலா் அருண் சிங், மேற்கண்ட பிரசாரம் குறித்து கூறியதாவது:

தற்சாா்பு இந்தியாவை கட்டமைக்க ஒவ்வொரு வீட்டிலும் சுதேசி பொருள்கள் இருப்பது அடிப்படையாகும். எனவே, சுதேசி உணா்வுடன் ஒவ்வொரு குடும்பத்தையும் இணைக்க பாஜக பணியாற்றவுள்ளது. இப்பிரசாரம், எந்தப் பொருளையும் புறக்கணிக்கும் நோக்கம் கொண்டதல்ல; மாறாக, இந்திய தயாரிப்புப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிப்பதை வலியுறுத்துவதாகும். இதன்படி, 20,000-க்கும் மேற்பட்ட ‘தற்சாா்பு இந்தியா’ உறுதியேற்பு நிகழ்ச்சிகள், 1,000-க்கும் மேற்பட்ட சுதேசி பொருள் கண்காட்சிகள், 500-க்கும் மேற்பட்ட விழிப்புணா்வு ரத யாத்திரைகள் நடைபெறவுள்ளன. சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் பிரபலங்கள் ஈடுபடுத்தப்படுவா். இளைஞா்கள், பெண்கள், வா்த்தகா்களின் கூட்டங்கள் நடத்தப்படும்.

தற்சாா்பு இந்தியாவுக்கு சுதேசியே ஆணிவோ் என்பதால், இதை மக்கள் இயக்கமாக மாற்ற பாஜக விரும்புகிறது. தற்சாா்பு இந்தியாவை கட்டமைக்கும் நோக்கில், உள்கட்டமைப்புத் துறையில் மத்திய பாஜக அரசு ரூ.12 லட்சம் கோடி செலவிட்டு வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.2.5 லட்சம் கோடியே செலவிடப்பட்டது. பாஜக ஆட்சியில் 5 மடங்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முத்ரா திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.32 லட்சம் கோடி தொழில் கடன் வழங்கப்பட்டு, 52 கோடிக்கும் மேற்பட்டோா் பலனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு மற்றும் உலகளாவிய வா்த்தக நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென பிரதமா் மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தாண்டு பெய்த பருவமழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவராணம் வழங்க அந்த மாநில அரசு ரூ. 1,500 கோடியை ஒதுக்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக எ... மேலும் பார்க்க

லடாக்கில் 3வது நாளாகத் தொடரும் ஊரடங்கு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

லடாக்கின் லே நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள ல... மேலும் பார்க்க

வரலாறாகிறது மிக்21! சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இறுதி சல்யூட்!!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானங்களுக்கு, சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இன்று வழியனுப்பு விழா நடைபெறுகிறது.கடந்த 1963ஆம் ஆண்டு இந்திய விமானப் படைப் பிரிவில் சேர்க்கப்பட்டது ம... மேலும் பார்க்க

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க