செய்திகள் :

சுந்தர். சி இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி?!

post image

சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வருகிற மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

அடுத்ததாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 படத்தில் நடித்து வரும் கார்த்தி தனது 29-வது படமாக டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், சர்தார் - 2 படத்திற்குப் பிறகு இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரண்மனை - 4, மதகஜராஜா என தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் கேங்கர்ஸ் படத்தை இயக்கி நடித்துள்ள சுந்தர். சி அடுத்ததாக மூக்குத்தி அம்மன் -2 படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தை முடித்த பின்னர் அவர் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர்.

இந்தாண்டு முடிவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | எஸ்.பி.பி, அஜித் குமார்... இளையராஜா செய்வது சரியா?

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஏப்ரல் 21 (திங்கள் கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந... மேலும் பார்க்க

பூஜாவின் ஆட்டத்திற்கு போட்டியே இல்லை!

நடிகை பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் தொடர்ந்து இணையத்தைக் கலக்கி வருகிறது. கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதற்கான இடம் நடிகைகளுக்கு அபூர்வமாகவே அமைகின்றன. பெரும்பாலும், உடல்மொழியிலோ அல்லது நடனத்திலேயோ ர... மேலும் பார்க்க

என் வாழ்க்கை நோக்கம் இதுதான்: சூர்யா

நடிகர் சூர்யா தன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து பேசியுள்ளார்.சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும்... மேலும் பார்க்க

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள்: மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்!

புலே திரைப்படத்திற்கு ஆதரவாக பேசிய தனக்கும் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ், சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்க... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கும் மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணைநிலை ஆளுநர் அலுவலகம், தீயணைப்புத்துறை ஆகியவற்றுக்கு வெடிகுண்... மேலும் பார்க்க

ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய எலக்ட்ரிக் கார்..! எவ்வளவு விலை தெரியுமா?

இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் புதிய எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். ஆஸ்கர் நாயகன் ஏஆர்.ரஹ்மான் இசையில் இந்தாண்டு காதலிக்க நேரமில்லை, சாவா படங்கள் வெளியாகி கவனம் பெற்றன. கடந்தாண்டு மனைவியுடனான விவகாரத்தை ... மேலும் பார்க்க