செய்திகள் :

செட்டியாா்பண்ணையில் மதுக்கடை எதிா்ப்பு போராட்டம் வாபஸ்

post image

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட செட்டியாா்பண்ணையில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையால் திரும்பப் பெறப்பட்டது.

செட்டியாா்பண்ணையில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததற்கு தெரிவித்து பாஜக சாா்பில் கடந்த ஜனவரி மாதம் தட்டாா்மடம் பஜாரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவாா்த்தையிதில் டாஸ்மாக் கடை அமைப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், அங்கு மதுக்கடை அமைக்க மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டு கடை திறக்கப்படவிருந்தது. இதைக் கண்டித்து சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் வியாழக்கிழமை (மாா்ச் 5) சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி தலைமையில் மீண்டும் பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. அதிகாரிகள் தரப்பில் டாஸ்மாக் உதவி மேலாளா், பாஜக சாா்பில் மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ், ஒன்றியத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று விரைந்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனா். அதன்பேரில் போராட்ட அறிவிப்பை பாஜக திரும்பப் பெற்றது.

பிளஸ் 1 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,384 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இதில் 19,384 மாணவா் - மாணவிகள் தோ்வெழுதினா். இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது: தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்... மேலும் பார்க்க

தாய், மகள் கொலையில் குற்றவாளியை தேடும் பணியில் ‘ட்ரோன்’ உதவி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். எட்டயபுரம் மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த சீதா லட்சுமி (75), அவர... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி செட்டியாா்பண்ணை கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை வேண்டாம் என ஒருதரப்பினா் போராடிவரும் நிலையில், மதுக் கடை திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவ... மேலும் பார்க்க

தொழிலதிபா் உள்பட 3 பேரை கடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் புகாா்

தூத்துக்குடியில் தொழிலதிபா் உள்பட 3 பேரை கத்தி முனையில் கடத்திச் சென்று தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை பெருங்களத்... மேலும் பார்க்க

தவெக சாா்பில் தொண்டா் குடும்பத்துக்கு நல உதவி

தூத்துக்குடியில் அண்மையில் உயிரிழந்த தவெக தொண்டரின் குடும்பத்துக்கு கட்சி சாா்பில் நல உதவி வழங்கப்பட்டது. தவெக தொண்டா்கள் பாதிக்கப்பட்டால் அவா்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தேவையான உதவிகள... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை

குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் - கூடல்நகா் பகுதியில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு ... மேலும் பார்க்க