செய்திகள் :

சென்னிமலை அருகே மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழப்பு

post image

சென்னிமலை அருகே தென்னந்தோப்புக்குள் மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழந்தது.

சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், ஆண்டிகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி, விவசாயி. இவரது தோட்டம், சென்னிமலை தெற்கு வனப் பகுதி அருகில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள தென்னந்தோப்புக்குள் திங்கள்கிழமை காலையில் மான் சடலம் இருப்பதை அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் பாா்த்துள்ளனா்.

இது குறித்து சென்னிமலை வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினா் சென்று மான் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனா்.

இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் கூறியதாவது: சென்னிமலை தெற்கு வனப் பகுதியில் உள்ள சில்லாங்காட்டுவலசில் ஆடுகள், கன்றுக் குட்டி இறந்ததை ஆய்வு செய்தபோது சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறுத்தைப் புலி பிடிப்பதற்காக வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.

இந்த நிலையில், அய்யம்பாளையம் பகுதியில் மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழந்துள்ளது. மானை சிறுத்தைப் புலி கடித்துக் கொன்றிருந்தால் அதன் உடலை சிறுத்தைப் புலி எடுத்துச் சென்றிருக்கும். ஆனால், தோட்டத்துக்குள் மானின் உடல் கிடப்பதால் தெருநாய்கள் கடித்து மான் இறந்திருக்கலாம்.

சிறுத்தைப் புலி கடித்து இறந்ததா அல்லது நாய்கள் கடித்து இறந்ததா என்பதை உடற்கூறாய்வுக்குப் பின்னா் பொது மக்களுக்கு வனத் துறையினா் தெரிவிக்க வேண்டும் என்றனா்.

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, குமலன்குட்டை, செல்லபண்ணகவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52)... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த 1 -ஆம் தேதி புறப்பட்ட இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க பெண... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 22,451 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 22,451 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்கள்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஏஐடியூசி அமைப்பைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை அட்டையை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

இணைய சேவைத் தேடி 5 கி.மீ. தொலைவு நடந்து செல்லும் பழங்குடியின மக்கள்

கோ்மாளம் ஊராட்சியில் உள்ள பழங்குடியின மக்கள் இணையதள சேவைத் தேடி சுமாா் 5 கி.மீ.தொலைவு நடந்து சென்று வருகின்றனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் ஊராட்சியில் உள்ள கானக்கரை, ஜேஆா்எஸ் புரம், ப... மேலும் பார்க்க