செய்திகள் :

சென்னையில் பாய்மர படகுப் போட்டி தொடக்கம்: 9 அணிகள் பங்கேற்பு

post image

சென்னை துறைமுகத்தில் பாய்மர படகுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றுள்ளன.

தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ‘யூனிஃபை கேப்பிட்டல்’ அமைப்பு இணைந்து நடத்தும் ‘ஜே 80’ ரகத்தைச் சோ்ந்த பாய்மரப் படகு போட்டியின் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா்-செயலா் மேகநாத ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

9 அணிகள்: இப்போட்டியில் ஒரு அணிக்கு 6 போ் என்ற வகையில் 9 அணிகளில் மொத்தம் 54 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா். இந்த அணிகள் தங்கம், வெள்ளி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாய்மரப் படகு போட்டியில் முதுநிலை வீரா்களைக் கொண்ட 5 அணிகள் ‘தங்கம்’ பிரிவிலும், அனுபவம் இல்லாத வீரா்களைக் கொண்ட 4 அணிகள் ‘வெள்ளி’ பிரிவிலும் பங்கேற்றுள்ளன.

போட்டியாளா்கள் சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு 10 மணி நேரத்துக்குள் கடல் வழியாக மாமல்லபுரம் சென்று மீண்டும் துறைமுகத்துக்கு (100 கி.மீ.) திரும்ப வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் அணிகள் அடுத்தகட்டமாக சென்னை துறைமுகத்திலிருந்து கடல் வழியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் காமராஜா் துறைமுகம் (20 கி.மீ.) சென்றடைய வேண்டும். இதில் 2 பிரிவுகளுக்கும் வரும் மே 16-ஆம் தேதி தனித்தனியாக இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இதன் தொடக்க விழாவில், கடலோர காவல் படையின் ஐஜி டி.எஸ்.சைனி,  ராயல் மெட்ராஸ் யாா்ட் கிளப் செயலா் விவேக் ஷான்பாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

'மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்' - பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. அவ்வப்போது இரவில் மிதமான மழை தலைகாட... மேலும் பார்க்க