செய்திகள் :

சென்னை: `உங்கள் பகுதியில் மழை நீர் தேங்கியிருக்கிறதா?' போட்டோ எடுத்து விகடனுக்கு அனுப்புங்க

post image

வடகிழக்குப் பருவமழை, மோன்தா புயல் என சென்னையில் கடந்த சில தினங்களாக தினமும் காலையில் மழை அட்டென்டன்ஸைப் போட்டுவிடுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்குச் செல்வோருக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இதையும் தாண்டிய சிரமம் என்றால்... செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது, ஆங்காங்கே இருக்கும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பது, சாக்கடை மூடாமல் இருப்பது எனத் தொடர்ந்து இந்த மழைக்காலம் சின்ன திகில் அனுபவத்தைத் தந்துகொண்டே வருகிறது.

இதை சுட்டிக்காட்ட சென்னை மக்களான உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இதோ...

மழை பாதிப்பு - சென்னை
மழை பாதிப்பு - சென்னை

உங்கள் பகுதியில் மழை தண்ணீர் தேங்கியிருப்பது, சாக்கடைகள் மூடாமல் இருப்பது போன்ற மழை பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், அதை போட்டோ அல்லது வீடியோ எடுத்து விகடனுக்கு அனுப்பலாம்.

நீங்கள் போட்டோ அல்லது வீடியோ அனுப்பும்போது செய்ய வேண்டிய விஷயம்... உங்கள் பெயர், நீங்கள் எந்தப் பகுதியில் அந்த போட்டோவை எடுத்திருக்கிறீர்கள், அந்த போட்டோ எடுத்த தேதி, நேரத்தோடு 73050 71364 இந்த வாட்ஸ் ஆப் நம்பருக்கு அனுப்பி வையுங்கள்.

இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?; திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை?அதன் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் தருமபுரி, கள்... மேலும் பார்க்க

Rain Updates: தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வானிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் தகவல்

பெரும்பாலும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் நவம்பர் மாதத்தின் இறுதியிலும், டிசம்பர் மாதத்திலும் மழை அதிகமாக இருக்கும். இதனால், ஒவ்வொரு ஆண்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இரு மாத மழை குறித்த சின்ன... மேலும் பார்க்க

மெலிசா: `நூற்றாண்டின் புயல்’ 174 ஆண்டுகளுக்குபின் ஜமைக்காவை தாக்கிய கடும் புயல்; அதிர்ச்சி காட்சிகள்

ஜமைக்கா நாட்டில் நேற்று கடுமையான சூறாவளி புயல் வீசியது. இந்தப் புயலுக்கு பெயர் மெலிசா. ஜமைக்கா நாட்டில் கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தப் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பு... மேலும் பார்க்க

Montha Cyclone: இன்று கரையைக் கடக்கும் புயல்; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; எங்கெல்லாம் ஆரஞ்சு அலெர்ட் | Live

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.இதில், அக்டோபர் 24-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 25-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவா... மேலும் பார்க்க

'மோன்தா' புயல் உருவாகியது; சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; வேறு எந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்?

'மோன்தா' புயல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம்.அதன் படி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று மோன்தா புயலாக மாறியுள்ளது.இந்தப் புயல் த... மேலும் பார்க்க