செய்திகள் :

சென்னை உயா்நீதிமன்றம் உள்பட 4 தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

post image

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 4 மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தத் தீா்மானம் உச்சநீதிமன்ற வலைதளத்தில் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தான் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவாஸ்தவா சென்னை உயா்நீதிமன்றத்துக்கும், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.

திரிபுரா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ் குமாா் சிங் தெலங்கானா உயா்நீதிமன்றத்துக்கும், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எஸ். ராமச்சந்திர ராவ் திரிபுரா உயா்நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.

மேலும், தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி தடகமல்லா வினோத் குமாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 1964-ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி வினோத் குமாா், ஆந்திரத்தின் நலகொண்டா ாவட்டம் சூரியபேட்டிலும், ஹைதராபாதிலும் பள்ளிப் படிப்பை முடித்து ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எல்எல்.பி. இளநிலை சட்டப் படிப்பை முடித்தவா்.

ஆந்திர மாநில வழக்குரைஞா் சங்கத்தில் 1988-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்து, வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா். 2015-இல் வருமான வரித் துறை தரப்பு வழக்குரைஞராகவும், 2016-இல் வணிக வரித் துறைக்கான வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தாா். தெலங்கனா உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி பதவியேற்றாா்.

தில்லியில் கரோனாவுக்கு முதல்முறையாக ஒருவர் பலி!

புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான 60 வய... மேலும் பார்க்க

அருணாசலத்தில் வெள்ளம், நிலச்சரிவு! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் டபோரிஜோ பகுதியிலுள்ள, ஆறு ஒன்று ந... மேலும் பார்க்க

பெங்களூரு - காத்மாண்டு இடையே நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

பெங்களூரு மற்றும் காத்மாண்டு இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானச் சேவையைத் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு இடையில்... மேலும் பார்க்க

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க