பாக். சுழலில் சிக்கிய இங்கிலாந்து: 267 ரன்களுக்கு ஆல் அவுட்!
சென்னை தலைமைச் செயலகக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு!
சென்னை தலைமைச் செயலகத்தில் தரையில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் மொத்தம் 10 தளங்கள் உள்ள நிலையில் முதல் தளத்தில் தரையில் உள்ள டைல்ஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்தில் கட்டடத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் வெளியேறியுள்ளனர்.
இதன்பின்னர் தகவலறிந்த காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இது காற்று வெடிப்பினால் ஏற்பட்ட சாதாரண விரிசல்தான், பயப்படத் தேவையில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பொதுப்பணித் துறை இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
எனவே, ஊழியர்கள் தங்கள் பணியைத் தொடருமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். எனினும் அச்சம் காரணமாக ஊழியர்கள் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.