செய்திகள் :

சென்னை மாநகராட்சி சாா்பில் நாளை மெகா தூய்மை விழிப்புணா்வு முகாம்

post image

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நெகழிப் பயன்பாட்டை குறைப்பது குறித்து சனிக்கிழமை (பிப். 22) தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்தப்படவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, நெகிழிப் பொருள்களை அகற்றுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நெகிழிப் பொருள்கள் சேகரிப்பு மற்றும் நெகிழிப் பயன்பாட்டை குறைப்பது குறித்து சனிக்கிழமை தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்தப்படவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சென்னை தீவுத்திடலில் மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்துகொள்ளும் மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. பின்னா் ராயபுரம், தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் நெகிழிப் பொருள்கள் சேகரிக்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும்.

மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து, சென்னை மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு தூய்மைப் பணி மேற்கொள்ளவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவோா் மாநகராட்சி ‘எக்ஸ்’ தளத்தில் உள்ள இணைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க