செய்திகள் :

சென்னை: மாநகர குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க புதிய ’பஸ் பாஸ்’!

post image

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க மாதாந்திர சலுகை பயண அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தற்போது குளிர்சாதனப் பேருந்தை தவிர்த்து மாதாந்திர பயண அட்டை மூலம் மற்ற பேருந்தில் பயணித்து வருபவர்கள், புதிய திட்டத்தின் மூலம் குளிர்சாதனப் பேருந்துகளிலும் பயணிக்க முடியும்.

மாதாந்திர பயணச் சலுகை திட்டங்கள்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அன்றாட பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயண சலுகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சாதாரண பேருந்தில் நாள்தோறும் பயணிப்பதற்கான பயண சலுகை அட்டை குறைந்த விலையில் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், போகவர இருமுறை மட்டுமே பயணிக்க முடியும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு பயணச் சலுகை அட்டைகள் வழங்கப்படுகிறது.

அதேபோல், விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டையும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

மாதம்தோறும் ரூ. 1,000 கட்டணமாக செலுத்தி பெறப்படும் இந்த பயணச் சலுகை அட்டை மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர்த்து, சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, சிற்றுந்து ஆகியவற்றில் பயணிக்க முடியும்.

ரூ. 1,000 அட்டை மூலம் நாளொன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ள முடியும்.

இதையும் படிக்க : கிரீன்லாந்து: அமெரிக்க எதிர்ப்புக் கட்சிகள் வெற்றி!

புதிய திட்டம்

இந்த நிலையில், குளிர்சாதனப் பேருந்துகளையும் உள்ளடக்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த பயணச் சலுகை அட்டைக்கு ரூ. 2,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இந்த அட்டையைப் பெறுபவர்கள் மாநகரத்தில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிக்கலாம்.

இந்த திட்டம் வருகின்ற ஜூன் மாதத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 14.55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பொருளாதார ஆய்வறிக்கை

தமிழகத்தில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் மூலம் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 936 இடங்களில் பட்ஜெட் நேரலை! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையானதுதமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது‌.தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை பொதுமக்கள் அறிந்து கொள... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி தினமணி செய்தியாளர் பலி

மதுரை: மதுரை- மேலூர் அருகே அரசுப் பேருந்து மோதி தினமணி செய்தியாளர் தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்தவர் தர்மராஜ்(58). தினமணி நாளிதழில் மேலூர் பகுதிக்கு செய்தியாளரா... மேலும் பார்க்க

தமிழகத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்?

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.பொதுவாக, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போதுதான் அதற்கு முந்த... மேலும் பார்க்க

நாளை(மார்ச் 14) பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை(மார்ச் 14) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமு... மேலும் பார்க்க

தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை

தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் வரும் நிதியாண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும்... மேலும் பார்க்க