செய்திகள் :

சென்னை ரயில் பயணிகள் கவனத்திற்கு.. எழும்பூர், பெரம்பூர் நிலையத்தில் ரயில்கள் நிற்காது!

post image

அண்டை மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக பல்லாயிரக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ஹைதராபாத், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள் பராமரிப்புப் பணிகள் காரணமாக எக்மோர் மற்றும் பெரம்பூரில் நிற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும், வழக்கமாக நின்று செல்லும் செகந்திராபாத் மற்றும் பாட்னா ரயில்களும் சென்னை எழும்பூர் மற்றும் பெரம்பூரில் நிற்காது.

அதற்குப் பதிலாக, இந்த ரயில்கள் செங்கல்பட்டு அல்லது திருத்தணியில் நிறுத்தப்படவுள்ளன. சென்னையிலிருந்து விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் புவனேஸ்வர் செல்லும் அகர்தலா - எஸ்எம்விடி பெங்களூரு ஹம் சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12504), பெரம்பூரில் நிறுக்காமல் கூடூர் மற்றும் ரேணிகுண்டா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் திருத்தணி இரண்டு இடங்களும் சென்னையின் முக்கிய பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 65 முதல் 80 கி.மீ. தொலைவில் உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

திருத்தணியில் ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டதால், பிப்.22 மற்றும் பிப்.25 ஆகிய தேதிகளில் கிட்டத்தட்ட 1,500 பயணிகள், பெரம்பூர் செல்வதற்காக அதிக நெரிசல் கொண்ட உள்ளூர் ரயில்களில் பயணம் மேற்கொண்டனர்.

திருத்தணியிலிருந்து பெரம்பூருக்கு நேரடியாக இயக்கப்படும் ஈமு ரயில்கள், காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பெரம்பூருக்குச் செல்ல இரண்டு மணிநேரத்துக்கும் மேல் ஆவதால் பயணிகள் மேலும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அவசரத்தில் பயணிப்பவர்களுக்கு, ரயில் நிலையத்தை அடைவதற்கு வாடகை டாக்ஸி எடுப்பது ஒரே வழியாக இருக்கிறது. டாக்ஸிகளில் செல்வதற்கு ரூ.1800 வரை வசூலிப்பதாகவும், பயணிகளின் தேவையைப் பயன்படுத்தி ஓட்டுநர்கள் கூடுதலாக ரூ.500 வசூலிப்பதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எழும்பூர், பெரம்பூர் நிலையங்களில் நின்று செல்லாத ரயில்கள் விவரம்

  • டாடாநகர் - எர்ணாகுளம் விரைவு ரயில் (18189)

  • அகர்தலா - எஸ்எம்விடி பெங்களூரு ஹம்சஃபர் விரைவு ரயில்(12504)

  • செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695)

  • திப்ரூகார்-மைசூரு பாக்மதி விரைவு ரயில் (12577)

  • பாட்னா - எஸ்எம்விடி பெங்களூரு ஹம்சஃபர் விரைவு ரயில் (22353)

  • ஜசிதி - எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில் (22306)

  • புரூலியா - திருநெல்வேலி விரைவு ரயில் (22605)

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்!

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல... மேலும் பார்க்க

தொகுதிகள் மறுசீரமைப்பு: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு தண்டனையா? -திமுக

தமிழகத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள விவகாரம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு கிடைக்கும் தண்டனையா என்று மத்திய அரசுக்கு திமுக கேள்வியெழுப்பியுள்ளது.மக்களவைத் தொகுதிகளின் மறுச... மேலும் பார்க்க

திமுக வேரோடு பிடுங்கப்படும்: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.கோவை பீளமேடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்து வை... மேலும் பார்க்க

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தடையில்லா சான்று!

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் மு... மேலும் பார்க்க

'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

விஜய் முதலில் தான் சொல்வதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜய், தனது கட்சியின் ஆண்டு விழாவில் மத்திய அரசு, மாநில அரசு இரண... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை முதல் கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 27) முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பிப். 26ல் தென்தமிழக மாவட்டங்கள்... மேலும் பார்க்க