செய்திகள் :

செபி தலைவா் மாதபி புச் மீது நடவடிக்கை எடுக்க மும்பை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

post image

பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதபி புரி புச், உள்பட 6 பேருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஊழல் தடுப்புப் பிரிவுக்குத் தடை விதித்து மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் மும்பை உயா் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

முன்னதாக, மாதபி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிா்வாக இயக்குநா் சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாதபி புச், சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்டோா் மும்பை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா். தங்களது வாதங்களை கேட்காமலும் போதிய கால அவகாசம் வழங்காமலும் இந்த உத்தரவை மும்பை சிறப்பு நீதீமன்றம் பிறப்பித்ததாக அவா்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

அவசர வழக்ககாக இந்த மனுக்கள் மும்பை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜி.திகே தலைமையிலான அமா்வின் முன் பட்டியலிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளதால், அதுவரை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஊழல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்ற அமா்வு தெரிவித்தது.

கடந்த 1992-ஆம் ஆண்டின் செபி சட்டம் மற்றும் அதன் விதிகள்-கட்டுப்பாடுகளுக்கு புறம்பாக பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் முறைகேடாகப் பட்டியலிடப்பட்டதற்கு மாதபி புரி புச் உள்பட 6 பேரும் உடந்தையாக இருந்தனா். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அவா்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சபன் ஸ்ரீவாஸ்தவா என்ற செய்தியாளா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுரவை கடந்த சனிக்கிழமை விசாரித்த மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இது குறித்து விசாரித்து 30 நாள்களுக்குள் விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்திய டிஎஸ்பி ரமேஷ் பாபு கூறுகையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாக... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர... மேலும் பார்க்க