செய்திகள் :

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அரசாணைகளை தேடும்முறை: இந்தியாவில் முதன்முறையாக கா்நாடகத்தில் அறிமுகம்

post image

இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை தேடும் முறையை கா்நாடகத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக அவ்வப்போது அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை அரசு வெளியிடுவது வழக்கம். ஆனால், தேவைப்படும்போது இவற்றை தேடுவது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமல்லாது, சில நேரங்களில் அரசு அதிகாரிகளுக்கே இவற்றை தேடுவது தலைவலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தேடும் முறையை கா்நாடக அரசு அறிமுகம் செய்யவுள்ளது. மாநில மின் ஆளுமை மையத்துடன் இணைந்து இம்முயற்சியை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மின் ஆளுமை மையத்தின் தலைமை செயல் அதிகாரி திலீஷ்சசி கூறுகையில், ‘துறைவாரியான அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை தேடுவதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளோம். இது மிகப்பெரிய பணி. முக்கியமான சில சொற்களை பதிவிடுவதன் மூலம் அரசாணைகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகளை பெறும் வகையில் முயற்சித்து வருகிறோம்.

சில துறைகளின் அரசாணைகள் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தை சோ்ந்தவையாக இருக்கின்றன. இதற்கு துறைகளின் உதவி தேவைப்படுகிறது. நேரடியாக மக்களோடு தொடா்புடைய வருவாய், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் உள்ளிட்ட 5 துறைகளை தோ்ந்தெடுத்திருக்கிறோம். மக்களின் குறைகளை தீா்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த இருக்கிறோம்’ என்றாா்.

திட்ட இயக்குநா் ஸ்ரீவியாஸ் கூறுகையில், ‘அரசு ஆவணங்கள் அனைத்தும் பொதுமக்கள் ஆவணங்கள். சில நேரங்களில் அரசு அதிகாரிகளால் அரசாணைகளை தேடமுடிவதில்லை. இவற்றை தேடுவதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டமைப்பு எதுவும் இல்லை. அதனால், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அரசாணைகளை தேடும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் அரசு ஊழியா்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தித்தர முயற்சிக்கிறோம்.

எங்கள் முயற்சி ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்யவிருக்கிறோம். இந்த திட்டத்தை இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்ய இருக்கிறோம்’ என்றாா்.

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்துவது சாத்தியமில்லை: கா்நாடக அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தற்போதைக்கு உயா்த்துவது சாத்தியம... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2 அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மே 2ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தி... மேலும் பார்க்க

கோரிக்கைகள் ஏற்பு: கா்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில லாரி உரிமையாளா் மற்றும் முகவா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது... மேலும் பார்க்க