ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்...
மே 12-ல் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கு வருகிற மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவமும், வைகையாற்றில் அழகர் எழுந்தருளும் வைபவமும் பிரம்மாண்டமாக நடைபெறும். மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொள்வர்.
இந்நிலையில் இந்த ஆண்டு வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் நிகழ்வு, வருகிற மே 12 ஆம் தேதி(திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்றைய நாள் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!