செய்திகள் :

செய்தியாளரை நெஞ்சில் தாக்கிய விஜய் பவுன்சர்கள்!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழாவின்போது செய்தியாளரை விஜய்யின் பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெற்றது.

இதையும் படிக்க : ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தவெக தலைவர் விஜய்யின் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனிடையே, செய்தியாளர்களுக்கும் பவுன்சர்களுக்கு இடையே விழா நடைபெறும் இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தின்போது செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், ஒரு செய்தியாளரை நெஞ்சில் தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விழா அரங்கில் இருந்து நெஞ்சை பிடித்தவாறு வெளியேறிய செய்தியாளரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சக செய்தியாளர்கள் அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், செய்தியாளர் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழா அரங்கில் இருந்து வெளியேறி ஆம்புலன்ஸில் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் பவுன்சர்களின் செயலுக்கு சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்!

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல... மேலும் பார்க்க

தொகுதிகள் மறுசீரமைப்பு: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு தண்டனையா? -திமுக

தமிழகத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள விவகாரம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு கிடைக்கும் தண்டனையா என்று மத்திய அரசுக்கு திமுக கேள்வியெழுப்பியுள்ளது.மக்களவைத் தொகுதிகளின் மறுச... மேலும் பார்க்க

திமுக வேரோடு பிடுங்கப்படும்: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.கோவை பீளமேடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்து வை... மேலும் பார்க்க

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தடையில்லா சான்று!

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் மு... மேலும் பார்க்க

'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

விஜய் முதலில் தான் சொல்வதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜய், தனது கட்சியின் ஆண்டு விழாவில் மத்திய அரசு, மாநில அரசு இரண... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை முதல் கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 27) முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பிப். 26ல் தென்தமிழக மாவட்டங்கள்... மேலும் பார்க்க