செய்திகள் :

ரஷியா செல்லும் பிரதமர் மோடி?

post image

ரஷியாவில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா, ரஷியாவின் மாஸ்கோ நகரில் சிகப்பு சதுக்கத்தில் மே மாதம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் ராணுவ வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரஷிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடைபெறவிருப்பதால், பிரதமர் செல்வதற்கு ஒருமாத காலம் முன்னதாகவே ராணுவ வீரர்கள் சென்று, அணிவகுப்புக்கு ஒத்திகை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க:போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு!

ரஷியாவில் 16 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழைப்பு விடுத்ததன்பேரில், பிரதமர் மோடி கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷியா சென்றிருந்தார். அதன்பிறகு, ரஷியாவுக்கு தற்போது செல்ல வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

1941 ஆம் ஆண்டு, ஜூன் 22 ஆம் தேதி சோவியத் யூனியன் மீது (தற்போதைய ரஷியா) ஜெர்மனி தாக்குதல் நடத்தியது. 1945, மே மாதம் 8 ஆம் தேதிவரை நீடித்த இப்போரில், சோவியத் யூனியனிடம் ஜெர்மனி படைகள் சரணடைந்தன. இந்த போர் வெற்றியைத்தான், ரஷியா ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 9-ல் கொண்டாடி வருகிறது.

மகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தா்கள்!

மகா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் சிவாலயங்களில் புதன்கிழமை கோடிக்கணக்கான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். சிவபெருமானுக்கு உரிய முக்கிய தினங்களில் ஒன்றான மகா சிவராத்திரி புதன்கிழமை கொண்டாடப்பட்டது... மேலும் பார்க்க

கப்பலை தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணை: இந்தியா வெற்றிகரமாக சோதனை

எதிரி நாட்டு கப்பல்களைத் தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணையை ஹெலிகாப்டரில் இருந்து ஏவி இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கோலாகலமாக நிறைவு: 65 கோடி பேர் பங்கேற்பு!

பிரயாக்ராஜ் : நிகழாண்டின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா இன்று(பிப். 26) நிறைவடைந்தது.பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைபெற்று வ... மேலும் பார்க்க

தங்கம் இறக்குமதியில் சரிவு!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது.ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. கடந்தா... மேலும் பார்க்க

குழந்தைகளைத் தேரில் இருந்து தூக்கி வீசும் விநோத சடங்கு? தடை செய்ய கோரிக்கை!

பெங்களூரு : அண்டை மாநிலமான கர்நாடகத்தில் குழந்தைகளைத் தேரில் இருந்து கீழே தூக்கி வீசும் விநோத நேர்த்திக்கடன் வழிபாட்டு முறைக்கு தடை செய்ய கோரிக்கை வலுத்துள்ளது.காடிவாடிகியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: மோப்ப நாய் உதவியை நாடும் மீட்புக் குழு!

தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க மோப்ப நாய்களைப் பயன்படுத்த மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.தெலங்கானாவின் நாகா்குர்னூல் மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சி... மேலும் பார்க்க