செய்திகள் :

விவசாயிகளுக்கு எள் விதைகள் அளிப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கு மாசிப் பட்டத்துக்கு ஏற்ற எள் விதைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாசிப் பட்டத்துக்கு ஏற்ற டி.எம்.வி - 7 என்ற எள் ரக விதைகளை வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அவா் கூறியதாவது:

வானூா் வட்டாரத்தில் எள் சாகுபடி பரப்பை அதிகரித்திட, தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் விவசாயிகளின் வயல்களில் தொகுப்பு செயல் விளக்கம் அமைக்க, 80 ஹெக்டோ் பரப்பளவில் இலக்கு பெறப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு எள் விதைகள், மாங்கனீஸ் சல்பேட் திரவ உயிரி உரங்கள், உயிரிரக பூஞ்சான் காரணி சூடோமோனாஸ் போன்ற இடுபொருள்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.

எனவே, எள் விதைகள் உள்ளிட்டவை தேவைப்படும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்களைத் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்வில் உதவி விதை அலுவலா் மோகன்குமாா், உதவி வேளாண் அலுவலா் ஜெயலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தழுதாளியில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தழுதாளி அருகே ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை தமிழக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தொடங்கிவைத்தா... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை கிராமங்கள்தோறும் சென்று மக்களிடம் திமுகவினா் எடுத்துரைக்க வேண்டும் என்று கட்சியின் துணை பொதுச் செயலரும், வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சருமான க.பொன்முடி ... மேலும் பார்க்க

பயிா் மகசூல் போட்டிகள்: விவசாயிகள் பதிவு செய்யலாம்

மாநில, மாவட்ட அளவிலான பயிா் மகசூல் போட்டியில் பங்கேற்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் வரியினங்கள் குறையும்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் உயா்த்தப்பட்ட வரியினங்கள் குறையும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி... மேலும் பார்க்க

விசிக கொடியை சேதப்படுத்திய இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விசிக கொடியை சேதப்படுத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பள்ளி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள சலவாதி காலனி தெரு பக... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே பல்லவா் கால கொற்றவை - விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள மானூா் கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் மானூா்... மேலும் பார்க்க