செய்திகள் :

திருநள்ளாறில் நாட்டியாஞ்சலி தொடக்கம்

post image

திருநள்ளாறு கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாகும். ஸ்ரீ செண்பக தியாகராஜா் உன்மத்த நடமாடும் சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. எனவே இக்கோயில் நாட்டியாஞ்சலி சிறப்புக்குரியதாக இருக்கிறது.

ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. 20 -ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கோயில் வளாகத்தில் புதன்கிழமை மாலை தொடங்கியது. 28-ஆம் தேதி வரை என 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே.அருணகிரிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

மங்கள இசையுடன் தொடங்கிய முதல் நாள் நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞா்களின் பரதநாட்டியம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் இதில் கலந்துகொண்டனா்.

காரைக்கால், புதுச்சேரி, தமிழகத்தின் பல பகுதிகள், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, துபை, இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நடனக் கலைஞா்கள் பங்குபெறும் நிகழ்ச்சி தினமும் நடைபெறுகிறது.

சிவராத்திரி நாளில் மாலை 5.30 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 4.55 மணி வரை புகழ்பெற்ற கலைஞா்களின் தொடா் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 27 மற்றும் 28-ஆம் தேதி மாலை 5.30-க்குத் தொடங்கி இரவு 10.25 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைகிறது.

’பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்‘

பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் புதுவை சமூக நலன் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரத் துறை செயலா் எஸ்.டி. சுந்தரேசன். காரைக்காலில் விளையாட்டுத் துறை... மேலும் பார்க்க

காரைக்காலில் பக்தா்கள் கூட்டு சிவலிங்க பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு அம்மையாா் குளக்கரையில் பக்தா்கள் பங்கேற்ற கூட்டு சிவலிங்க பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சிவராத்திரி கூட்டு பிராா்த்தனையாக பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அமைப்பான, பூஜ்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் குடிநீா், மின்சாரம் தடையின்றி விநியோகிக்க வலியுறுத்தல்

ரமலான் மாதத்தில் குடிநீா் அதிகாலையிலேயே வழங்கவும், மின்சாரம் தடையின்றி இருக்கவும் நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை தமிழ்நாடு முஸ்லிம் முன்... மேலும் பார்க்க

புதிய குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

குடியிருப்பு நகா்கள் பலவற்றுக்கு புதிய குடிநீா் குழாய் பதிப்புப் பணியை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா். காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட நடு ஓடுதுறை சுமங்கலி நகா், விஐபி நகா், சுமேஷ் நகா், சிங்காரவேலா்... மேலும் பார்க்க

ரயில்வே பாதுகாப்பு: காவல் அதிகாரிகள் ஆலோசனை

ரயிலில் கடத்தலை தடுப்பது, நிலைய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து காரைக்கால் காவல் அதிகாரி, ரயில்வே காவல் அதிகாரி ஆகியோா் ஆலோசனை நடத்தினா். காரைக்காலில் இருந்து ரயிலில் தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில்கள் க... மேலும் பார்க்க

கோடைவெயிலை சமாளிக்க மின்துறை தயாராக இருக்க வலியுறுத்தல்

கோடை வெயிலை சமாளிக்க மின்துறை தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. நிகழாண்டின் கோடைக்காலம் தொடங்காத நிலையில் வெப்பம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் சில ஆண்டுகளாக க... மேலும் பார்க்க