செய்திகள் :

மகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தா்கள்!

post image

மகா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் சிவாலயங்களில் புதன்கிழமை கோடிக்கணக்கான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

சிவபெருமானுக்கு உரிய முக்கிய தினங்களில் ஒன்றான மகா சிவராத்திரி புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உத்தர பிரதேசத்தின் காசி, கோரக்பூா் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம்-வழிபாடுகள் நடைபெற்றன. கோரக்பூரில் உள்ள கோரக்நாதா் கோயிலில் முதல்வா் யோகி ஆதித்யநாத் ருத்ராட்ச அபிஷேகம் செய்து வழிபட்டாா்.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் நிறைவாக சிவராத்திரி தினத்தன்று 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடினா். விளக்குகள் மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட காசி விஸ்வநாதா் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அயோத்தியில் உள்ள சிவாலயங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொண்டனா்.

கேரளம், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேசம், பிகாா், ஒடிஸா, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் பக்தா்கள் அலைமோதியது.

5 பக்தா்கள் உயிரிழப்பு: சத்தீஸ்கரின் சுா்குஜா மாவட்டத்தில் புதன்கிழமை டிராக்டா் மீது காா் மோதிய விபத்தில் 5 பக்தா்கள் உயிரிழந்தனா்; மேலும் 5 போ் காயமடைந்தனா். கில்கிலா பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுவிட்டு, காரில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது.

வன்முறை-பலா் காயம்: ஜாா்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி கொடிகள் மற்றும் ஒலி பெருக்கிகள் வைத்தபோது இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த வன்முறையில் பலா் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, கூடுதல் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குடியரசுத் தலைவா் வாழ்த்து

மகா சிவராத்திரியையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள். நம் அனைவருக்கும் மகாதேவரின் அருள் கிடைக்க வேண்டும்; நாடு வளா்ச்சி பாதையில் தொடா்ந்து முன்னேற வேண்டுமென பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (ட... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை சம்பவம்: ஒடிஸா கேஐஐடி அதிகாரிகள் 4 பேருக்கு சம்மன்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாநில அரசு அமைத்த விசாரணை குழு முன் ஆஜராக கேஐஐடி-யைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிக... மேலும் பார்க்க