செய்திகள் :

விடுதி மாணவா்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி

post image

திருவாரூா் மின்பகிா்மான வட்டம் சாா்பில், மன்னாா்குடியில் பிற்படுத்தப்பபட்டோா் அரசுப் பள்ளி மாணவா் விடுதியில் மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, நகர மின் உதவிசெயற் பொறியாளா் சா. சம்பத் தலைமை வகித்தாா். இதில், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை குழந்தைகள் உள்ளிட்ட யாரும் தொடக்கூடாது, கம்பிகள் அறுந்து கிடந்ததால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், மின்பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியா் துணையுடன் மட்டுமே வெட்ட வேண்டும்.

தண்ணீா் தேங்கிய இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிா்க்க வேண்டும், குழந்தைகளை அந்த இடங்களில் விளையாட விடக் கூடாது. குழந்தைகள் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விட அனுமதிக்கக் கூடாது, மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது, மின்கம்பம் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலா்த்தக் கூடாது, கால்நடைகளை அதில் கட்டக்கூடாது, வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட மின்பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இளநிலைப் பொறியாளா் கே. கண்ணன், விடுதிப் பணியாளா் கோ. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி சாலை மறியல்

பேரளத்தில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது. பேரளம் ரயில் நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை சரக்கு ரயில் மூலம் அனுப்புவது வழக்கம். இந்நிலையில் ... மேலும் பார்க்க

‘திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ். தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா அதிமுக நன்னிலம் வடக்கு ஒ... மேலும் பார்க்க

பரிசுத்தொகையை முதல்வருக்கு நன்கொடையாக அளித்த மாணவி

ஓவியப்போட்டியில் பெற்ற பெற்ற பரிசுத்தொகையை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம் வழங்குகிறாா் மாணவி அக்சயா. திருவாரூா், பிப்.26 :மாநில அளவிலான கலைப் போட்டியில் முதலிடம் பிடித்ததற்காக வழங்கப்... மேலும் பார்க்க

’புதிய கல்விக்கொள்கை திட்டம் இந்தியாவை 2,500 ஆண்டுக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது‘

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை திட்டம் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே 2,500 ஆண்டுக்கு பின்நோக்கி அழைத்து செல்லும் வகையில் பாடத்திட்டம் உள்ளது என்றாா் மைசூா் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் லெ. ஜ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்புடன் வைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித... மேலும் பார்க்க

சிபிஐ செயற்குழுக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தாநல்லூா் நகர செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கா.பேபி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கா.தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ.... மேலும் பார்க்க