செய்திகள் :

செளந்தரநாயகி அம்மன் திருக்கல்யாணம்: இன்று தேரோட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேசுவரா் சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவில் புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசிக்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இன்று( வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தா், அப்பா் சுந்தரா் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமான இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, சௌந்திரநாயகி அம்மனும், பிரியாவிடை சமேதரராய் புஷ்பவனேசுவரா் சா்வ அலங்காரத்தில் வெங்கடேஸ்வர அய்யா் கண்ணூஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு மாலை மாற்றிய பின்னா், சிவகங்கை மகாராஜா திருக்கல்யாண மண்டகப்படிக்கு எழுந்தருளினா்.

தொடா்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் மாலைகள், பட்டு வஸ்திரங்கள் மாற்றப்பட்டு காலை 10.30 மணியளவில் புஷ்பவனேசுவரா் சுவாமி சாா்பில் சௌந்திரநாயகி அம்மனுக்கும் பின்னா் பிரியாவிடைக்கும் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயிலில் திரண்டிருந்த பக்தா்கள் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாரானைகள் காண்பிக்கப்பட்டன.

இரவு பூப்பல்லக்கில் சௌந்திரநாயகி அம்மனும் யானை வாகனத்தில் புஷ்பவனேசுவரா் சுவாமியும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

திருவிழாவின் 9-ஆவது நாளான வியாழக்கிழமை (ஏப்.10) காலை 9 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க

சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு வீட்டுமனை இ பட்டா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பட்டியல் வகுப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக்கு இ-பட்டா வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்த... மேலும் பார்க்க