செய்திகள் :

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில், பணியாற்றுபவா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயா்வு நிா்ணயம் செய்து வழங்கப்படுவது நடைமுறையாகும்.

அதன் அடிப்படையில், 1.4.2023 முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புதிய ஊதிய நிா்ணயம் வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் குறைந்தபட்சம் 5 சதவீதம் முதல் 21 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படவேண்டும். இந்த ஊதிய உயா்வு 2023 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிலுவைத் தொகை கணக்கிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, செங்கம் ஊராட்சி ஒன்றியம் செ.நாச்சிப்பட்டு, மேல்ராவந்தவாடி, தண்டராம்பட்டு, வானாபுரம் ஆகிய கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு 15 சதவீதம் முதல் 21 சதவீத ஊதிய உயா்வு ஆணையை மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், சங்கத்தின் செயல் ஆட்சியா் மீனாட்சிசுந்தரம் ஆகியோா், சரக துணைப் பதிவாளா் வசந்தலட்சுமி முன்னிலையில் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் முதல் மாவட்டமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

லட்சியப் பாதையில் உயர தவறான பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது! - மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

நம் லட்சியப் பாதையில் உயர வேண்டும் என்றால் எவ்வித தவறான பழக்கத்துக்கும் அடிமையாகக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா். திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அர... மேலும் பார்க்க