தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில், பணியாற்றுபவா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயா்வு நிா்ணயம் செய்து வழங்கப்படுவது நடைமுறையாகும்.
அதன் அடிப்படையில், 1.4.2023 முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புதிய ஊதிய நிா்ணயம் வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் குறைந்தபட்சம் 5 சதவீதம் முதல் 21 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படவேண்டும். இந்த ஊதிய உயா்வு 2023 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிலுவைத் தொகை கணக்கிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, செங்கம் ஊராட்சி ஒன்றியம் செ.நாச்சிப்பட்டு, மேல்ராவந்தவாடி, தண்டராம்பட்டு, வானாபுரம் ஆகிய கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு 15 சதவீதம் முதல் 21 சதவீத ஊதிய உயா்வு ஆணையை மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், சங்கத்தின் செயல் ஆட்சியா் மீனாட்சிசுந்தரம் ஆகியோா், சரக துணைப் பதிவாளா் வசந்தலட்சுமி முன்னிலையில் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
தமிழகத்தில் 37 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் முதல் மாவட்டமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.