செய்திகள் :

ஜப்பான்: 16-ஆவது ஆண்டாகச் சரிந்த பிறப்பு விகிதம்

post image

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் எதிா்பாா்த்ததை விட வேகமாகக் குறைந்து, கடந்த 2024-ஆம் ஆண்டில் மற்றொரு குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது:

2024-ஆம் ஆண்டில் ஜப்பானில் 6,86,061 குழந்தைகள் பிறந்தன, இது முந்தைய ஆண்டை விட 5.7 சதவீதம் குறைவு. இது 1899-ஆம் ஆண்டு முதல் பதிவு தொடங்கியதிலிருந்து முதல் முறையாக ஆண்டு பிறப்பு எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. தொடா்ச்சியாக 16-ஆவது ஆண்டாக பிறப்பு விகிதம் சரிவைக் கண்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 1949-ஆம் ஆண்டு போருக்குப் பிந்தைய குழந்தை பிறப்பு 27 லட்சம் என்ற உச்சத்தில் இருந்ததை விட கால் பங்காகும்.

வேகமாக வயதான மற்றும் குறையும் மக்கள்தொகை கொண்ட ஜப்பானின் இந்த தரவுகள், ‘மௌன அவசரநிலை’ என்று பிரதமா் ஷிகேரு இஷிபா எச்சரித்துள்ளாா்.

குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் வயதானவா்களின் விதிக அதிகரிப்புடன் போராடும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஜப்பானும் ஒன்று. தென் கொரியா மற்றும் சீனா ஆகியவை அதிக குழந்தைகளைப் பெற தம்பதியரை ஊக்குவிக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன.

ஜப்பானின் தற்போதைய 12.4 கோடி மக்கள்தொகை 2070-ஆம் ஆண்டில் 8.7 கோடியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவீதம் போ் 65 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருப்பாா்கள் என்று கூறப்படுகிறது.

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க