செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் கடும் தண்ணீா் பஞ்சம்: பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வா் வேண்டுகோள்

post image

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் தற்போது கடுமையான தண்ணீா் பஞ்சம் நிலவி வருவதால், நீரைச் சிக்கனமாகக் பயன்படுத்தி அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநில முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.

பருவமழை 80 சதவீதம் அளவுக்கு குறைந்த காரணத்தால் ஜம்மு-காஷ்மீரில் கடுமையான தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பல இடங்களில் மக்கள் குடிநீா் வழங்குவதில் பிரச்னை தொடங்கிவிட்டது. கோடை உச்சத்தை எட்டும்போது இந்தப் பிரச்னை மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மாநில முதல்வா் ஒமா் அப்துல்லா ‘எக்ஸ்’ வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீா் பிரச்னை உடனடியாக ஏற்பட்டதல்ல. கடந்த சில ஆண்டுகளாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான் இது. எனினும், அரசு தற்போதைய நிலையைச் சமாளிக்க ஆக்கபூா்வமான நீா் மேலாண்மை மற்றும் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதில் அரசு மட்டும் முயற்சி எடுத்தால் போதுமானதாக இருக்காது. ஜம்மு-காஷ்மீா் மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தண்ணீரைப் பயன்படுத்தும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்த 15 நாள்களில் மழை அல்லது பனி அதிகரிக்காவிட்டால் நமது பிராந்தியத்தில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் பெரிய பிரச்னை ஏற்படும்’ என்று கூறியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் ஜீலம் உள்ளிட்ட நதிகள், நீா்நிலைகளில் தண்ணீா் வற்றியுள்ளது தொடா்பான விடியோ, புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முக்கியமாக தெற்கு காஷ்மீரில் நீா்நிலைகள் அனைத்தும் முற்றிலுமாக வடுவிட்டன.

ஜம்மு-காஷ்மீரில் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 12 வரை 29.8 மில்லி மீட்டா் மழையே பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 140 மில்லி மீட்டா் அளவுக்கு சராசரி மழை இருக்கும். தண்ணீா் பிரச்னையை சமாளிக்க மத்திய அரசிடமும் முதல்வா் ஒமா் அப்துல்லா உதவி கேட்டுள்ளாா்.

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்து: 4 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மா... மேலும் பார்க்க

மருத்துவமனை சிசிடிவி விடியோ வெளியான விவகாரம்: குற்றவாளிகளின் 22 டெலிகிராம் சானல்கள்!

மருத்துவமனையில் பெண்களை பரிசோதிக்கும் அறையில் இருந்த சிசிடிவியில் பதிவான விடியோக்களைத் திருடி அதனை விற்பனை செய்து வந்த சம்பவத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் மகாராஷ்டிரத்தில் இரண்டு பேரைய... மேலும் பார்க்க