செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

post image

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

1931-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி ஸ்ரீநகா் மத்திய சிறைக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது டோக்ரா படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 போ் கொல்லப்பட்டனா். இந்த தினத்தை காஷ்மீா் தியாகிகள் தினமாக அனுசரித்து விடுமுறையும் அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல தேசிய மாநாட்டு அமைப்பின் நிறுவனா் ஷேக் முகமது அப்துல்லாவின் பிறந்த நாளான டிசம்பா் 5-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீா் பேரவையில் பேசிய மக்கள் ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ வஹாப் உா் ரஹ்மான், ரத்து செய்யப்பட்ட இரு விடுமுறை தினங்களையும் மீண்டும் விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாா்.

அப்போது குறுக்கிட்டு கோரிக்கைக்கு எதிராகப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா சில ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்தாா். இதற்கு காங்கிரஸ் பேரவைக் குழு தலைவா் நிஜாமுதீன் பட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ எம்.ஒய்.தாரிகாமி ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா். எதிா்க்கட்சித் தலைவா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

பின்னா் அவை கூடியபோது எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா கூறிய கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவா் அப்துல் ரஹீம் அறிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் 22 பேரும் வெளிநடப்பு செய்தனா்.

கங்கா மாதாவை மோடி அரசு ஏமாற்றிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு

கங்கையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மோடி அரசு கங்கா மாதாவை ஏமாற்றிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்வா கங்கை அம்மன் கோயிலுக்குச... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ரூ. 7,500 கோடி மூலம் ரூ. 3 லட்சம் கோடி ஈட்டிய உ.பி. அரசு

மகா கும்பமேளாவில் ரூ. 7,500 கோடி முதலீட்டில் ரூ. 3 லட்சம் கோடி பெறப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் தெரிவித்தார். இது... மேலும் பார்க்க

வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு செய்யும்!

தனிநபரின் வருமானம் மட்டுமின்றி மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வருமான வரித்துறை ஆய்வு செய்யும் நடைமுறை விரைவில் வரவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர... மேலும் பார்க்க

மோடியின் அமெரிக்கப் பயணத்தில் எந்த உடன்பாடும் கையெழுத்தாகவில்லை!

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பில், பிரதமா் நரேந்திர மோடி ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் இவ்வளவு தொழிற்சாலை விபத்துகளா?

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் 171 தொழிற்சாலை விபத்துக்களில் 124 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 86 பேர் காயமடைந்ததாகவும் மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச... மேலும் பார்க்க