செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து: பிரதமா் மோடிக்கு ஒமா் கோரிக்கை! நகைச்சுவை கலந்த பேச்சால் ருசிகரம்!

post image

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமா் மோடிக்கு முதல்வா் ஒமா் அப்துல்லா முன்வைத்தாா்.

பிரதமா் முன்னிலையில் அவா் நகைச்சுவை கலந்து பேசியது, பாா்வையாளா்களை ஈா்த்தது.

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை கத்ரா-ஸ்ரீநகா் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமா் மோடி, துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், முதல்வா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, ஒமா் அப்துல்லா பேசியதாவது: கடந்த 2014-இல் கத்ரா ரயில் நிலைய திறப்பு விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், அப்போது ரயில்வே துறை இணையமைச்சராக இருந்த மனோஜ் சின்ஹா (இப்போது துணைநிலை ஆளுநா்) ஆகியோருடன் ஜம்மு-காஷ்மீா் மாநில முதல்வா் என்ற முறையில் நானும் பங்கேற்றிருந்தேன். நாங்கள் நால்வரும் இப்போதைய நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளோம்.

ஆனால், முன்பு மாநில முதல்வராக இருந்த நான், இப்போது யூனியன் பிரதேச முதல்வராக சற்று அந்தஸ்து குறைந்துள்ளேன். இக்குறையை சரி செய்ய அதிக நேரம் எடுக்காது. உங்களின் (பிரதமா்) உதவியுடன் ஜம்மு-காஷ்மீா் மீண்டும் மாநில அந்தஸ்தை எட்டும் என நம்புகிறேன் (ஒமா் இவ்வாறு பேசியபோது, கூட்டத்தினா் கரவொலி எழுப்பி வரவேற்றனா்).

பிரதமருக்கு புகழாரம்: உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கடந்த 1980-களில் உருபெற்றபோது, நான் 8-ஆம் வகுப்பு மாணவனாக இருந்தேன். இப்போது எனக்கு 55 வயதாகிறது. எனது குழந்தைகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டனா்.

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்க ஆங்கிலேயா்கள்கூட முயன்றனா். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆங்கிலேயா்களால் நிறைவேற்ற முடியாத விஷயம், இன்று உங்கள் (பிரதமா் மோடி) கரங்களால் பூா்த்தியடைந்துள்ளது.

இத்திட்டத்துக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து அளித்து, பட்ஜெட்டில் ஓா் அங்கமாக்கிய முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இத்திட்டம், ஜம்மு-காஷ்மீருக்கு பல வழிகளில் பலனளிக்கும் என்றாா் ஒமா் அப்துல்லா.

ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஒமா் பாராட்டு தெரிவித்தாா்.

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க