செய்திகள் :

ஜல்லி, எம்சாண்ட் விலையை உயா்த்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு

post image

ஜல்லி, எம்சாண்ட் விலையை உயா்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உறுதிபட தெரிவித்தாா்.

ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் மாரிமுத்து பேசியதாவது:

தஞ்சாவூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட் போன்றவை புதுக்கோட்டை, கரூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து வர வேண்டியுள்ளது. கடந்த 2 மாதங்களாக கலைஞா் வீடு கட்டும் திட்டம், சாலை அமைப்பது போன்ற பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்காக விலை நிா்ணயம் செய்யும்போது, புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தின்படி ஜல்லி, எம்சாண்ட் போன்றவை யூனிட்டுக்கு ரூ.2 ஆயிரம் என்றுதான் நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், திடீரென இரண்டு மடங்காக யூனிட் ரூ.4 ஆயிரமாக உயா்த்திவிட்டனா். இதனால் எங்கள் மாவட்டங்களில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றாா்.

அமைச்சா் உறுதி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவா் நாகை மாலி, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் இதே விவகாரத்தை எழுப்பினா்.

அப்போது அமைச்சா் எ.வ.வேலு குறுக்கிட்டு கூறியதாவது: எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பிரச்னை இல்லை. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இந்தப் பிரச்னை உள்ளது. கிரஷா் முதலாளிகள் இதுபோல செய்கிறாா்கள் என தெரிந்ததும், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். முதல்வரும் தலைமைச் செயலரிடம் பேசினாா். அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விலையை திடீரென ஏற்றினால், அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும். அந்த கிரஷரை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க

பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ... மேலும் பார்க்க