செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72ஆக நிறைவு!

post image

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72 ஆக முடிவடைந்தது.

இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளிட்டவையால் இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சற்றே உயர்ந்தாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.72 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.88.67 முதல் ரூ.88.73 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72ஆக நிறைவடைந்தது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 1 காசு சரிந்து ரூ.88.76 என்ற புதிய வாழ்நாள் சரிவில் நிறைவடைந்தது.

இதையும் படிக்க: மருந்து மீதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

வோடபோன் ஐடியா பங்குகள் 8% சரிவுடன் நிறைவு!

புதுதில்லி: 2016-17 வரையிலான காலகட்டத்திற்கான கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கோரிக்கைகளை ரத்து செய்யக் கோரிய நிறுவனத்தின் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததை... மேலும் பார்க்க

முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

மும்பை: வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை விசாரித்து விரைவாக தீர்வு காண்பதற்கான சில விதிமுறைகளை பின்பற்றாத முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.2.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர... மேலும் பார்க்க

மருந்து மிதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் முதல் மருந்துகளுக்கு 100 சதவிகித வரிகளை அறிவித்ததால், முதலீட்டாளர்கள் மருந்து மற்றும் ஐடி பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததை தொடர்ந்து, இன்றைய வ... மேலும் பார்க்க

செல்போன், மின்னணு சாதனங்களுக்கு ஃபிளிப்கார்டின் எக்ஸ்சேஞ்ச் திட்டம்!

பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில், ஃபிளிப்கார்டு நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.இ-வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட், பழைய பொருள்களைக் கொடுத்த... மேலும் பார்க்க

அதிகம் நிறுவப்படும் கடன், பட்டுவாடா செயலிகள்

இந்தியாவின் நிதிநுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களின் வங்கி சேவை செயலிகளைவிட, கடனளிப்பு மற்றும் பட்டுவாடா சேவை செயலிகளை வாடிக்கையாளா்கள் தங்களின் அறிதிறன் பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) அதிகம் நிறுவுவதாக ரிசா்வ் ... மேலும் பார்க்க

ஹெச்பிவி தடுப்பூசி: விடால் ஹெல்த் - சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம்

கா்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மூன்றாம் தரப்பு நிா்வாகச்சேவை (டிபிஏ) நிறுவனமான விடால் ஹெல்த்தும் உலகின் மிகப்பெரிய த... மேலும் பார்க்க