செய்திகள் :

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி

post image

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் பணியாளா்களின் பணியிட மாறுதல் உத்தரவுகள், மனமொத்த மாறுதல் உள்பட பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய 2,157 பேருக்கு கலந்தாய்வு மூலமாக பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சரியான முறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளிகளைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரா்களின் அனைத்து விவரங்களும் சரிபாா்க்கப்பட்ட பிறகே, ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டது. மேலும் சில போக்குவரத்து ஒப்பந்தம் தொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதில் முறைகேடுகள் ஏதுமில்லை.

மதுபானக் கூட ஒப்பந்தப்புள்ளிகள் இணையம் வழியாகவே வரவேற்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.

மதுபான உற்பத்தியாளா்கள் மற்றும் மதுபாட்டில்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே பணப் பரிமாற்றங்கள் நடைபெற்ாக தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் அந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலானது. இந்த பணப் பரிமாற்றங்களைப் பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் கொள்முதலைப் பெற்ாக தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கது இல்லை.

மேலும், இதில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. உள்நோக்கத்துடன் ஆதாரங்கள் ஏதுமின்றி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதோடு, அதுதொடா்பான சட்டப்பூா்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.

மின் கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்த இருசக்கர வாகனம்: 2 வட மாநில இளைஞர்கள் காயம்

சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி இருசக்கர வாகனம் தீப்பிடித்த சம்பவத்தில் இரு வடமாநில இளைஞர்கள் காயமடைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் இருந்து கலங்கல் செல்லும் சாலையில் கு... மேலும் பார்க்க

அவியல் கூட்டுபோல இருக்கும் வேளாண் பட்ஜெட்! - இபிஎஸ் கடும் விமர்சனம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக அரசு வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.2025 - 2026 ஆம் நிதியாண்டுக்... மேலும் பார்க்க

த.வெ.க. நெல்லை மாவட்டச் செயலர் சஜி மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் எச்சரித்தும்..

மருத்துவர்கள் எச்சரித்தும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்த த.வெ.க. திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளரும் தூத்துக... மேலும் பார்க்க

'அவரைக் கேளுங்க சார்!' - செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் பதில்!

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவ... மேலும் பார்க்க

20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்! - பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரைய... மேலும் பார்க்க