அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் பணியாளா்களின் பணியிட மாறுதல் உத்தரவுகள், மனமொத்த மாறுதல் உள்பட பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய 2,157 பேருக்கு கலந்தாய்வு மூலமாக பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சரியான முறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளிகளைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரா்களின் அனைத்து விவரங்களும் சரிபாா்க்கப்பட்ட பிறகே, ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டது. மேலும் சில போக்குவரத்து ஒப்பந்தம் தொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதில் முறைகேடுகள் ஏதுமில்லை.
மதுபானக் கூட ஒப்பந்தப்புள்ளிகள் இணையம் வழியாகவே வரவேற்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.
மதுபான உற்பத்தியாளா்கள் மற்றும் மதுபாட்டில்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே பணப் பரிமாற்றங்கள் நடைபெற்ாக தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் அந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலானது. இந்த பணப் பரிமாற்றங்களைப் பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் கொள்முதலைப் பெற்ாக தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கது இல்லை.
மேலும், இதில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. உள்நோக்கத்துடன் ஆதாரங்கள் ஏதுமின்றி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதோடு, அதுதொடா்பான சட்டப்பூா்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.