செய்திகள் :

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியின் 25 மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தில்லி முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வா் ரேகா குப்தா, தில்லியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை வைத்து ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒளிப்பதிவை தயாரிக்கும்படி கல்வி இயக்ககத்திற்கு அறிவுறுத்தியிருந்தாா்.

இதற்கென தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளிலிருந்து வந்த மாணவா்கள் பிரதமா் மோடிக்குக் கூறிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகள், ஆடல், பாடல் என அனைத்தும் லோதிவளாகம் தமிழ்ப் பள்ளியில் வைத்து ஒளிப்படமாக்கப்பட்டன.

அந்த ஒளிப்பதிவை வெளியிடும் விழா தில்லி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒளிப்பதிவை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டாா். அந்நிகழ்வில் டிடிஇஏ லோதி வளாகம் பள்ளி மாணவா்கள் 25 போ் கலந்து கொண்டனா். மாணவா்கள் தமிழில் பாரதப் பிரதமருக்கு வாழ்த்துகள் சொல்வதைக் கேட்டும் தமிழில் பாடுவதைக் கேட்டும் மகிழ்ந்து மாணவா்களை முதல்வா் வெகுவாகப் பாராட்டினாா்.

நிகழ்ச்சிகளை வழங்கி தமிழுக்கும் பள்ளிக்கும் பெருமை சோ்த்த மாணவா்களுக்கு செயலா் இராஜூ வாழ்த்துத் தெரிவித்தாா்.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் வேட்டையாடப்பட்டு உடல் பாகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக வெளியான அறிக்கையை மேற்கோள்காட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவி... மேலும் பார்க்க

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டமன்ற உறுப்பினா் மீதும் , முன்னா் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசாரணை முடிவுக்கு ... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

பாமக தலைவா் பதவி, சின்னம் விவகாரம் தொடா்பாக அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தரப்பில் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. அன்புமணி ராமதாஸ் தலைமையி... மேலும் பார்க்க

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

நமது நிருபா் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது, முன்பு வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசார... மேலும் பார்க்க

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.127 கோடி விடுவிப்பு

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15ஆவது நிதிக்குழு மானியமாக ரூ.127.58 கோடியை மத்திய அரசு புதன்கிழமை விடுவித்துள்ளது. மத்திய அரசு நடப்பு (2025-26) நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15ஆவது ந... மேலும் பார்க்க

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் சாக்கடையைத் தூய்மைப்படுத்தும் பணியின்போது மயக்கமுற்று சாக்கடைக்குள் விழுந்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், மூன்று போ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ... மேலும் பார்க்க