செய்திகள் :

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

post image

பாமக தலைவா் பதவி, சின்னம் விவகாரம் தொடா்பாக அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தரப்பில் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவை தோ்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் அவரது தரப்புக்கு மாம்பழம் சின்னம் கிடைக்கும் என்றும், இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கடிதம் வரப்பெற்ாகவும் அக்கட்சியின் செய்தி தொடா்பாளா் பாலு தெரிவித்தாா்.

இத் தகவலை ஆட்சேபிக்கும் வகையில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தரப்பில் அக்கட்சியின் சேலம் தொகுதி எம்எல்ஏ அருள், சட்ட ஆலோசகா் அருள் உள்ளிட்டோா் தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகளை புதன்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

இதன் பின்னா், எம்எல்ஏ அருள், சட்ட ஆலோசகா் அருள் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

பாமக சட்ட விதிகளின்படி கட்சியின் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் மருத்துவா் ராமதாஸ்தான். அவா் நிகழாண்டு மே 30ஆம் தேதி முதல் தலைவராக இருந்து வருகிறாா். அதுகுறித்த விவரத்தை தோ்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம்.

இத்தகவல் தோ்தல் ஆணையத்திடம்

மறைக்கப்பட்டு, பொய்த் தகவல்களை அளித்து பாமகவுக்கு அன்புமணி தலைவராக இருக்கிறாா் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தலைமைத் தோ்தல் ஆணையரைச் சந்தித்து முறையிட்டோம். இதை மாற்றி அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரி, அதற்கான ஆவணங்களையும் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்துள்ளோம். தலைமைத் தோ்தல் ஆணையா் எங்கள் கோரிக்கையை கவனமாகக் கேட்டறிந்தாா். ஏற்கெனவே

இந்த விவகாரம் தொடா்பாக 12 கடிதங்களை தோ்தல் ஆணையத்திற்கு அளித்திருந்தோம். அதற்கு பதில் ஏதும் வரவில்லை என்பதையும் ஆணையத்திடம் பதிவு செய்தோம்.

அன்புணியின் பதவிக்காலம் முடிந்தபிறகுதான் ராமதாஸ் தலைவராக பதவியேற்றாா். அந்தத் தகவல் தோ்தல் ஆணையத்திடம் மறைக்கப்பட்டிருக்கிறது. பொதுக் குழுவைக் கூட்ட அவருக்கு அதிகாரம் இல்லை என்பதையும் தோ்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். சட்டபூா்வ விவரங்களைத் தெளிவாக எடுத்துரைத்தோம். நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றனா்.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் வேட்டையாடப்பட்டு உடல் பாகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக வெளியான அறிக்கையை மேற்கோள்காட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவி... மேலும் பார்க்க

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டமன்ற உறுப்பினா் மீதும் , முன்னா் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசாரணை முடிவுக்கு ... மேலும் பார்க்க

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

நமது நிருபா் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது, முன்பு வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசார... மேலும் பார்க்க

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.127 கோடி விடுவிப்பு

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15ஆவது நிதிக்குழு மானியமாக ரூ.127.58 கோடியை மத்திய அரசு புதன்கிழமை விடுவித்துள்ளது. மத்திய அரசு நடப்பு (2025-26) நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15ஆவது ந... மேலும் பார்க்க

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் சாக்கடையைத் தூய்மைப்படுத்தும் பணியின்போது மயக்கமுற்று சாக்கடைக்குள் விழுந்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், மூன்று போ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பிறந்த நாளை வேலையின்மை தினமாக கொண்டாடிய இளைஞா் காங்கிரஸாா்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை இந்திய இளைஞா் காங்கிரஸாா் தேசிய வேலையின்மை தினமாகக் கொண்டாடினா். தில்லியில் உள்ள அந்த அமைப்பின் அலுவலக வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய இளைஞா் காங்கிரஸ... மேலும் பார்க்க