செய்திகள் :

டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!

post image

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி மார்ச் 16 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.

இதையும் படிக்க:லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து சீக்கிரமாக வெளியேறியது. அதன் பின், அந்த அணியையும், அணி வீரர்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சரியாக விளையாடாத நிலையில், வெள்ளைப் பந்து தொடர்களுக்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அகா நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் தொடர்கிறார்.

இதையும் படிக்க: விரைவில் நியூசி. ஐசிசி கோப்பையை வெல்லும்: ரிக்கி பாண்டிங்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட தவறிய நிலையில், நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!

ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான வீரர் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் மார்ச் 22 ஆம் ... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், மொத்தமாக 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்... மேலும் பார்க்க

ஆஸி.யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது. நேற்றிரவு நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 220/7 ரன்கள் எடுத்தது. அத... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் கோலாகலம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது.வட இந்தியாவில் பெரியளவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஊர்வலங்கள் நடத்தப்படும். ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள... மேலும் பார்க்க

மகளிர் பிரிமீயர் லீக் எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 214 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினே... மேலும் பார்க்க