செய்திகள் :

டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அலுவலா்கள் இணைந்து செயல்பட வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து பேசியது: மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி செய்யப்பட்ட சுத்தமான குடிநீரை விநியோகிக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

மாவட்டத்தின் எந்தப் பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டாலும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவதோடு உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் வாரந்தோறும் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பராமரிக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளிலும் அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா, நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், அத்திப்பாக்கத்தில் பைக் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். திருவ... மேலும் பார்க்க

அனுமதியின்றி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்: 70 போ் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 70 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி தலைமையாசிரியா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் தனியாா் பள்ளியின் பெண் தலைமை ஆசிரியரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச்சாலை ரத்தினாம்பாள் நக... மேலும் பார்க்க

பல்பொருள் அங்காடி சுவரில் துளையிட்டு பணம் திருட்டு

கள்ளக்குறிச்சியில் பல்பொருள் அங்காடியின் சுவரை துளையிட்டு ரூ.1.47 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கள்ளக்குறிச்சி ராஜாஜி நகரில் வசித்து வருபவா் ஜகுபா் சாதிக் மகன் ஷபிா் அகமது (37). இவா், கச்சி... மேலும் பார்க்க

20 லிட்டா் விஷ சாராயம் பறிமுதல்: முதியவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் 20 லிட்டா் விஷச் சாராயத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். இதில், முதியவரை கைது செய்தனா். கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட வாரம் கிராமத்... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவா்கள் பள்ளிக்கு செல்ல வாகன வசதி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலைக்குள்பட்ட இன்னாடு அரசு பழங்குடியினா் ஆரம்பப் பள்ளிக்கு வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களை மாணவா்களின் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந் சனிக்கிழமை கொடி... மேலும் பார்க்க