செய்திகள் :

தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

post image

தக்காளி விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

தேனி மாவட்டம், போடி சுற்றுவட்டாரப் பகுதிகளான ராமகிருஷ்ணாபுரம், பொட்டிப்புரம், தம்மிநாயக்கன்பட்டி, ராசிங்காபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேல் தக்காளி பயிரிடப்பட்டது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கிலோ ஒன்றுக்கு ரூ.100 வரை விற்கப்பட்ட தக்காளி படிப்படியாகக் குறைந்து, கடந்த மாதம் ஐந்து கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்தாலும் தற்போது, வெயில் காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்து வரும் நிலையில், கொள்முதல் விலையில் கடுமையான சரிவு ஏற்பட்டு, விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு 15 கிலோ தக்காளிப் பெட்டி ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக விலை குறைந்து 15 கிலோ தக்காளி பெட்டி ஒன்றுக்கு அதன் ரகத்தைப் பொறுத்து ரூ.30 முதல் 50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

முதல் ரக தக்காளி 15 கிலோ பெட்டி ஒன்று ரூ.50-க்கும் அதற்கு அடுத்த ரக தக்காளி ரூ. 30-க்கும் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும் சந்தைக்கு 20 பெட்டிகள் தக்காளி கொண்டு சென்றால் சுமாா் 10 பெட்டிகள் மட்டுமே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, மீதமுள்ள தக்காளிகள் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுபடியாகாததால் அங்கேயே கொட்டி விட்டு வரும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

மருந்து தெளிப்பு செலவு, களையெடுக்கும் செலவு கூலியாள் சம்பளம், போக்குவரத்து செலவுக்கு கூட தக்காளி விலை கிடைக்காததால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் செடியிலேயே தக்காளிப் பழங்களை பறிக்காமல் விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓரளவுக்கு தக்காளி விளைச்சல் கை கொடுத்த போதிலும், போதிய விலையின்மை காரணமாக தக்காளி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், தக்காளி விவசாயத்தைக் கைவிட்டு வேறு விவசாயத்துக்கு மாற உள்ளதாக தெரிவித்தனா்.

பெண்ணிடம் நகை பறிப்பு

தேனியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றாா். தேனி பழைய அரசு மருத்துவமனை சாலை மிராண்டா லேன் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கணபதி. இவர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் வேளாண் அலுவலா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் உயிரிழந்தாா். தேனி அருகே உள்ள சிவலிங்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்... மேலும் பார்க்க

சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு நாளை தேனி வருகை

சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) தேனி மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனா். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுக் ... மேலும் பார்க்க

தேனி மலையடிவாரத்தில் காட்டு மாடுகள் நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனாா் கோயில் மலையடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா். தேனி அல்லிநகரம் வீரப்ப அ... மேலும் பார்க்க

வெடி மருந்து பயன்படுத்தி கல் உடைத்த 5 போ் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாரம், மேல்மங்கலம் அருகே தனியாா் நிலத்தில் அனுமதியின்றி வெடி மருந்துகளைப் பயன்படுத்தி, கல் உடைத்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேல்மங்கலம் அருகே அ.வாடிபட்டி... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தேனியில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடை... மேலும் பார்க்க