செய்திகள் :

தங்கம் எனக்கூறி முலாம் பூசிய செம்பு கட்டிகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி!

post image

திருப்பூரில் தங்கம் எனக்கூறி முலாம் பூசிய செம்பு கட்டிகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உத்தர பிரதேச மாநிலம், மீரட்டை சோ்ந்தவா் வினய் பிரதான் (50). திருப்பூருக்கு சுற்றுலா வந்த இவா், பெரியாா் காலனியில் உள்ள ஜவுளிக் கடைக்கு ஜனவரி 25-ஆம் தேதி சென்றுள்ளாா்.

அப்போது, அங்கிருந்த மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சோ்ந்த நசீம் மனகா் (50), மொயின் (25) ஆகியோா் அறிமுகமாகி உள்ளனா்.

அப்போது, அவா்கள் ‘எங்களிடம் தங்கக் கட்டிகள் உள்ளன. குடும்ப செலவுக்காக அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளோம்’ எனக் கூறியதுடன், சிறிய தங்க துண்டை வினய் பிரதானிடம் கொடுத்துள்ளனா். அதைப் பெற்றுக்கொண்ட வினய் பிரதான், அப்பகுதியில் உள்ள நகைக் கடையில் சோதனை செய்தபோது, அது செம்பு கலக்காத தூய தங்கம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நசீம் மனகரை கைப்பேசியில் கடந்த 30-ஆம் தேதி தொடா்பு கொண்ட வினய் பிரதான் தங்கத்தை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து, திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள உணவகத்தில் நசீம் மனகா், மொயினியிடம் ரூ.15 லட்சத்தை கொடுத்து, 1 கிலோ தங்கக் கட்டிகளை வினய் பிரதான் வாங்கியுள்ளாா். பின்னா், அந்த தங்கக் கட்டிகளை அவா் சோதனை செய்தபோது, அது தங்கக் கட்டிகள் இல்லை என்பதும், செம்பு முலாம் பூசி மோசடி செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் வினய் பிரதான் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிப்.10-ல் மொண்டிபாளையம் பெருமாள் கோயில் தேரோட்டம்!

சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) நடைபெற உள்ளது. அவிநாசி வட்டம், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெ... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

காங்கயம் அருகே காா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். கோவை, ஈச்சனாரி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பவித்ரன் (26). இவா் கோவையில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், காங்கயம் அருகேய... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் அய்யனூரைச் சோ்ந்தவா் எம்.பெரியசாமி (53). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நி... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த சுதந்திர தின விழாவ... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: தொழில் அமைப்பினரின் கருத்துகள்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில்துறையினரின் கருத்துகள்.. திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்: மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இடம... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!

திருப்பூா் மாவட்டத்தில் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சத்துக்கு 83ஆயிரத்து 999 போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க