செய்திகள் :

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,140 உயர்வு!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களாக தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று(செப்,29) காலை, ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ.10,640-க்கும், சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600க்கும் விற்பனையானது.

தற்போது, தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 86,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிடும் என நிபுணர்கள், வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உச்சத்தில் வெள்ளி

இந்த மாத தொடக்கத்தில் (செப். 1) வெள்ளி விலை கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1.36 லட்சத்துக்கும் விற்பனையானது. தொழில் துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் அதன் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.160-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.60 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

The price of gold jewelry in Chennai has increased by Rs. 1,140 per sovereign in a single day.

இதையும் படிக்க:காஸா போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் - நெதன்யாகு இன்று சந்திப்பு!

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

ம.பி.யில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலி!

மத்தியப் பிரதேசத்தில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலியானார். மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தின் பிகான் கிராமத்தில் உள்ள சந்த் சிங்கஜி கோயிலில் நடந்த 'கர்பா' நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? இபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

கரூர் பலி: வதந்தி பரப்பிய தவெக நிர்வாகி உள்பட மூவர் கைது

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்தியை பரப்பியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பியதாக பாஜக மாநில நிர்வாகி ச... மேலும் பார்க்க

கரூரில் நெரிசலில் காயம்- 51 பேர் டிஸ்சார்ஜ்

தவெக கூட்டத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த 110 பேரில் 51 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். எஞ்சிய 59 பேரில் 51 பேருக்கு கரூர் அரசு மருத்... மேலும் பார்க்க

கரூர் பலி: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களின் மூலமாக வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்ற... மேலும் பார்க்க