செய்திகள் :

தஞ்சாவூரில் சமுதாய வளைகாப்பு: 600 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை

post image

தஞ்சாவூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 600 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்) முன்னிலை வகித்தனா்.

இதில் தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா் அம்மாபேட்டை, பாபநாசம் ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த 600 கா்ப்பிணிளுக்கு தாம்பூலத் தட்டு, வளையல், சேலை, குங்குமம், மஞ்சள், கடலை மிட்டாய், வாழைப்பழம், உலா் திராட்சை ,வெற்றிலை பாக்கு , பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களுடன் பூமாலை அணிவித்து மங்கல சீா் வரிசைகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்டத் திட்ட அலுவலா் கை. இராஜேஸ்வரி, முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் அருளானந்தசாமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராவூரணியில் மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை

பேராவூரணி ஒன்றியத்தில் கல்லணை கால்வாய் பிரிவு-1, நீா்வளத்துறை சாா்பில் விடப்பட்ட மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய வேண்டுமென தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. பேராவூரணி ஒன்றியம், செருவா... மேலும் பார்க்க

ஒரத்தநாடு பெண் உதவி ஆய்வாளருக்கு பிடி ஆணை

மனித உரிமை மீறல் தொடா்பான வழக்கில் ஆஜராகாத ஒரத்தநாடு பெண் உதவி ஆய்வாளருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள பனையூா் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பாபநாசம் கோயில்களில் சஷ்டி, காா்த்திகை வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறை பாலைவனநாதா் சுவாமி கோயிலில் மாசி மாத காா்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியையொட்டி கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு வழி... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நாளை மக்களுடன் முதல்வா் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானம்

தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் செய்யப்பட்டன. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள கலைஞா் நகரைச் சோ்ந்தவா் கே. குரு மாணிக்கம் (5... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

நாச்சியாா்கோவில் அருகே புதன்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள அழகாபுத்தூா் வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல... மேலும் பார்க்க